விருதுநகர், ஜூலை 17- 2024 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்ட ணியே வெற்றி வாகை சூடும் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழ கிரி தெரிவித்தார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காமராஜரின் 121 ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு மக்களவை உறுப்பினர் ப.மாணிக் கம் தாகூர் தலைமை தாங்கினார். அப்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி யின் துணை இல்லாமல் மக்களவைத் தேர்த லில் பாஜகவை அகற்ற முடியாது. எனவே தான் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றன. சிறு சிறு மாநில கட்சிகளும் கூட இந்த கூட்டணி யில் இடம் பெற முன்வந்துள்ளன. இதைத் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெளி வாக குறிப்பிட்டுள்ளார். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்ட ணியே வெற்றி வாகை சூடும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக 10 ஆம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் முதலிடம் பெற்ற 500 மாணவ-மாணவி களுக்கும், சுகாதாரம், மருத்துவம், தூய்மை ஆகியவற்றில் சிறப்பாக பணி யாற்றியவர்களுக்கும் விருதுகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறப்பி னர்கள் அசோகன் (சிவகாசி) ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மாவட்ட தலைவர்கள் ஸ்ரீராஜாசொக்கர், ரங்க சாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் எம். மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.