districts

img

ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தலையீட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும்

பெரியகுளம் ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தலையீட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். இரண்டு மாத சம்பளப் பாக்கி வழங்க வேண்டும். ராஜதாணி ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு மூன்று மாத சம்பளப் பாக்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.ஜெயபாண்டி, ஏ.சி.காமுத்துரை, என்.மதுரைமுத்து, எம்.குருசாமி, எஸ்.பழனிசாமி, சருத்துபட்டி கிளை நிர்வாகிகள் ராஜாராம், செல்வம், ராஜா தானி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.