districts

img

தூத்துக்குடி மாவட்டத்தில் மனிதச் சங்கிலி போராட்டம்

தூத்துக்குடி, அக். 12 சமூக நல் லிணக்கத்தை வலியுறுத்தி யும்,மதவெறி வெறுப்பு பிரச்சாரம் செய்ப வர்களை ஓதுக்கி மத ஓற்றுமையைப் பேண வலியுறுத்தியும் உடன்குடி பேருந்து நிலை யம் அருகே மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் உடன்குடி ஓன்றிய செயலாளர் ஆறுமுகம், உடன்குடி ஒன்றிய வி.சி.க., தலைவர் தமிழ்வாணன், மமக மாவட்ட தலைவர் ஆசாத், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.சிவசுப்பிரமணியன், ஆம் ஆத்மி மாவட்ட இணை ஓருங்கிணைப்பாளர் குணசீலன் ஆகியோர் தலைமை வகித்த னர். விசிக நகர தலைவர் தௌபிக் அன்சாரி, விசி க தொகுதி செயலாளர் வெற்றிவேந் தன், பங்கு தந்தையர்கள் ஜேம்ஸ் சின்னத் துரை, விக்டர், உடன்குடி நகர காங்., தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை சிபிஎம் மாநில குழு உறுப்பினர் பூமயில் துவக்கி வைத்தார்.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதவெறி பரப்பும் கட்சிகள், அமைப்புகளை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதில் மாவட்ட மகளிர் காங்., தலைவர் சிந்தியா,விசிக மாநில மாணவரணி துணை செயலாளர் தர்மராஜ்,தமுமுக நகர தலைவர் அஜீஸ்,மமக நகர செயலாளர் அமீது, உடன்குடி டவுன் பஞ்., முன்னாள் கவுன்சிலர்கள் சலீம்,காசிம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி பழைய பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜர், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ், விசிக மாவட்ட செயலாளர் கதிரே சன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முனியசாமி, ஆதி தமிழர் கட்சி மாநில நிர்வாகி திலீபன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செய லாளர் தேவேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், கயத்தாறு தாலுகா செயலாளர் சாலமன், விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, எட்டையாபுரம் தாலுகா செயலாளர் ஜீவராஜ், மற்றும் நகர குழு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகரச் செயலாளர் சரோஜா, ஒன்றிய செயலாளர் பாபு, மதிமுக விநாயகர் ரமேஷ்,விசிக பெஞ்ச மின், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி    

 வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டு வோம் சனாதனக் கொள்கையை அம்பலப் படுத்துவோம் மக்கள் ஒற்றுமையை பாது காப்போம் என்ற கோஷங்களை முன் வைத்து    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையம், புளியங்குடி ,சங்கரன்கோவில், செங்கோட்டை, ஆலங்குளம் ,வாசுதேவ நல்லூர் உள்ளிட்ட இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடை பெற்றது. தென்காசியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டச் செய லாளர். டேனியல் அருள்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாவட்டச் செயலாளர் உ.முத்துபாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர். இசக்கிதுரை. தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.  அயுப்கான். எம். தங்கம்.மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட னர். கடையம் ஒன்றியத்தில், ஆம்பூர், பொட்டல்புதூர், கடையம் ஆகிய மூன்று மையங்களில் நடைபெற்றது. இந்த இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்  ராம கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்  வெங்க டேஷ், மாதர் சங்க மாவட்ட செயலாளர்  மேனகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டக் குழு உறுப்பினர்  ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி பரமசிவன்,  மதிமுக ஒன்றிய செயலாளர் மதியழகன், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் அன்பழகன், கோவிந்தப் பேரி பஞ்சாயத்து தலைவர்  டிகே.பாண்டி யன், அனந்தபெருமாள்நாடானுர் பஞ்சா யத்து தலைவர் அழகுதுரை, மமக நிர்வாகி கள் சேக், அப்துல்காதர், சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூரில் பயணியர் விடுதி முன்பு  நடைபெற்ற சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு விசிக வாசுதேவ நல்லூர் ஒன்றியச் செயலாளர் இரா.சுரேஷ் தலைமை தாங்கினார். நிகழ்வில் விசிக மாவட்ட துணைச் செயலாளர் சாமித்துரை, நகரச் செயலாளர் மா.கண்ணன், சி.சுரேஷ், சு.பாஸ்கர்,.சிபிஎம் ஒன்றியச்செயலாளர் இரா.நடராஜன் , வாசு நகர கிளைச்செயலா ளர் ப.சுப்பையா, சிஐடியூ சார்பில் ம. மருதையா , பே.மாரியப்பன் , விவசாய சங் கத்தின் மு.பெரியசாமி, ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தின் மி.ராஜ், ஆசிரியர் சந்திரன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வழக்க றிஞர் சங்கை கணேசன், நகர காங்கிரஸ் தலைவர் செல்வராஜ். மதிமுக ஒன்றியச்செய லாளர் கிருஷ்ணகுமார், நகரச் செயலாளர் பாசறை அ.கணேசன், மாவட்ட மாணவ ரணி செயலாளர் பா.மாரிச்சாமி, ஒன்றியப் பொருளாளர் ஆர்.மாரிச்சாமி, வாசு - மாரி யப்பன் .திராவிடத் தமிழர் கட்சி தென் மண்டல துணைத்தலைவர் ஆதிவீரன்.எஸ்.டி.பி.ஐ நகரச்செயலாளர் முகம்மது யூசுப், நகரத்தலைவர் சேட்டு உட்பட நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர்.  புளியங்குடியில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற சங்கிலி இயக்கத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர் சங்கரன்கோவிலில் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் பாலுச்சாமி, கண்ணன், தாலுகா குழு செயலாளர் அசோக் ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் பீர் மைதீன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் காசி, காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் உமா சங்கர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கபாண்டி யன், ஆதி தமிழர் கட்சி சார்பில் தென்னரசு சிபிஐ சார்பில் தாலுகா செயலாளர் கனக ராஜ், எஸ்டிபிஐ சார்பில் நசீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.