சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள நவத்தாவு கிராமத்தில் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி அடைக்கலம், செல்வி,முத்துக்கருப்பன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இவர்களுக்கு அரசு சார்பில் தண்ணீர் வசதி, தார்ச்சாலை சாலை, சிமிண்ட் சாலை, மின்வசதி, குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.