districts

img

முனைவர் ராஜ்பிரவினுக்கு தோட்டக்கலை ஆராய்ச்சியாளர் விருது

சிதம்பரம்,ஜூலை 28- அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்  துறை இணைப் பேராசிரியர் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப தகவல் மைய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் தி. ராஜ் பிரவினுக்கு ‘சிறந்த தோட்டக்கலை ஆராய்ச்சியாளர் விருது 2020’ அண்மையில் வழங்கப்பட்டது.  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதா லட்சுமி மற்றும் சிறப்பு விருந்தினர் பி. கே. கிருஷ்ணராஜ், வானவராயர் ஆகி யோர்  ஏ ஊ. வெள்ளியங்கிரி கவுண்டர் தோட்டக்கலை ஆராய்ச்சியாளர் 2020 விருதை தி. ராஜ் பிரவினுக்கு வழங்கினார்.  ஜம்மு மாநில வேளாண் துறையுடன் இணைந்து மேற்கொண்ட கடலோரத்  தமிழ்நாட்டில் வண்ணப் புரட்சி செயல் திட்ட விரிவாக்கப் பணிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த சிறந்த தோட்டக் கலை ஆராய்ச்சியாளர் விருது பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக விரி வாக்க இணைப் பேராசிரியர். தி. ராஜ் பிரவின் அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முது முனைவர் இராம. கதிரேசனின் வாழ்த்து பெற்றார்.