கொச்சி, மே 1- கேரள மின்சார வாரியத்தின் (கேஎஸ்இபி) தொழிற்சங்க தேர்தலில் சிஐடியு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று வெற்றியை பெற்றது. கேரள மாநில மின்சார வாரியத் தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) 13,634 வாக்குகள் (53.42 சதவீதம்) பெற்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் சிஐடியு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக மாறியது. கடந்த முறை நடந்த வாக்கெடுப்பில் சிஐடியுவுடன் ஏஐடியுசி, ஐஎன்டியுசி ஆகிய இரண்டு அமைப்புகளும் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால், இம்முறை வாக்கெடுப்பில் ஏழு தொழிற்சங்கங்கள் பங்கேற்றன, ஆனால் சிஐடியுவைத் தவிர வேறு எந்த அமைப்பும் 15 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை. கேரள மின்சார தொழிலாளர் சம்மேளனம் ( ஏஐடியுசி ) 3810 வாக்குகள் (14.93 சதவிகிதம்), ஐக்கிய ஜனநாயக மின்சார ஊழியர் முன்னணி 3796 வாக்குகள் (14.87), கேரள மின்சார மஸ்தூர் சங்கம் ( பிஎம்எஸ் ) 2096 வாக்குகள் (8.21) கேரள மாநில மின்வாரிய தொழிலாளர் சங்கம் 1432 (5.65), கேரள மின்வாரிய நிர்வாக பணியாளர் அமைப்பு 630 வாக்குகள் (2.47), மின்வாரிய பணியாளர் கூட்டமைப்பு 15 வாக்குள் (0.06 சதவிகிதம்) பெற்றன. மாநிலத்தில் மொத்தம் உள்ள 26,246 தொழிலாளர்களில் 25,522 தொழிலாளர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு 97.24 சதவிகிதம். ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கலை தடுத்து நிறுத்துவது, கே.எஸ்.இ.பி.யை பொதுத்துறையில் தக்கவைத்து உலகத்தரமாக மாற்றுவது, மின் துறையில் கேரளாவின் மாற்றை நிலைநிறுத்துவது, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது போன்றவற்றை மையமாக கொண்டு சங்கத்தின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என பொதுச் செயலாளர் எஸ்.ஹரிலால் கூறினார். பாலாரி வட்டம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் வெற்றி யைக் கொண்டாடினர்.