மாமேதை மார்க்ஸ் நினைவு நாளையொட்டி தீக்கதிர் வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில் மார்க்ஸ் உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் இடைக் கமிட்டி செயலாளர்கள், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்