districts

கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

மதுரை, நவ.18-  கலைமாமணி விருது எதன் அடிப்படை யில் வழங்கப்படுகிறது? எவ்வாறு நபர் களை தேர்வு செய்கிறீர்கள்? என்று கேள்வி  எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம்,   இயல், இசை,  நாடக மன்றத்தை கலைக்க உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி மாவட் டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில். “தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை கள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கற்பிக்கப் படுகிறது. தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது வழங்கி வருகிறது. கலை மாமணி விருது 5 பிரிவின் கீழ் வழங்கப் படுகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு “கலை இளமணி” விருதும், 19 முதல் 35 வயது வரை “கலை வளர்மதி” விருதும், 36 முதல் 50 வயது வரை “கலை சுடர் மணி” விருதும், 51 முதல் 60 வயது வரை “கலை நன்மணி” விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு “கலை முதுமணி” விருதும் வழங்கப்படுகிறது. கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயது வரம்போ, எந்தவித தகுதியோ, எந்தவித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்பட வில்லை. 2019-2020ஆம் ஆண்டுக்கான கலை மாமணி விருது 20.02.2021 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதில் தகுதி இல்லாத நபர்க ளுக்கு கலைமாமணி விருது வழங்கப் பட்டுள்ளது. 

மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கிய சான்றிதழில் உறுப்பி னர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோ ரின் கையொப்பம் இல்லாமல் அவசரக் கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலி யுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது 2021-இல் வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு வெள்ளியன்று நடை பெற்றது. 

2021 ஆம் ஆண்டு கலைமாமணி விருது முந்தைய அரசால் வழங்கப்பட்டது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருகன் பாண்டி, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார். அப்போது நீதிபதிகள், கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகி றீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கி றீர்கள்?  விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது.கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.கலைத்துறையில் சாதனைகள் செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கலைமாமணி விருது , தற்போது 2 படங்களில் நடித்து விட்டால் அவர்களு க்கு விருது வழங்கலாம் என்ற நிலை உரு வாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருது கள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பி னர் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்  என்று உத்தரவிட்டனர்.  வழக்கு விசாரணை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.