districts

img

தனி நலவாரியம் அமைத்திடுக! தேனியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, நவ.16- தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சுமைப் பணி தொழிலாளர்கள் சங்  கத்தின் சார்பில் தேனியில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில்வே குட்செட் ,டாஸ்  மாக் ,நேரடி நெல் கொள் முதல் நிலையம் ,பொது விநியோக திட்டம் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பி.எப், இஎஸ்ஐ பிடித்தம் உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது .தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் என்.நீலமேகம் தலைமை வகித்தார் . போராட்டத்தை ஆத ரித்து சிஐடியு மாவட்டத் தலைவர் டி .ஜெயபாண்டி, மாவட்ட பொருளாளர் ஜி . சண்முகம்,கட்டுமான தொழி லாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பி .பிச்சை மணி,ஆட்டோ தொழிலா ளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஏ.முருகவேல் ஆகியோர் பேசினர் . சுமைப்பணி மாவட்ட பொரு ளாளர் பி .சந்திரசேகர் கோரிக்கைகளை விளக்கி பேசினார் .சிஐடியு தேனி  மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன் நிறைவு செய்து பேசினார். செல்லத் துரை நன்றி கூறினார்.