தேனி, ஜூலை 12- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந் துள்ளது. இதனால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்க ளில் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரி யாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. திங்களன்று 2122 கன அடியாக அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை காலை 3266 கன அடியாக நீர் வரத்து வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 129.05 அடி யாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகு திக்கு 1655 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4493 மி.கன அடியாக உள்ளது. இதே போல் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் செவ்வாயன்று காலை நிலவரப்படி 55.61 அடி யாக உள்ளது. நீர்வரத்து 1555 கன அடி. திறப்பு 969 கன அடி. இருப்பு 2818 மி.கன அடி. நீர் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 60 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 7527 அடியாகவும் உள்ளது. மழையளவு: பெரியாறு 44, தேக்கடி 13, கூடலூர் 2.3, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.