districts

img

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலா பயணிகள் குதூகலம்

ஏற்காடு, அக். 30- சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருந்து வரு கிறது. இங்குள்ள படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ெஜன்ஸ் சீட், சேர்வ ராயன் கோயில் உள்ளிட்ட இடங்க ளுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பெங்களூரு, புதுச்சேரியில் இருந்து அதிகளவில் மக்கள் வந்து, ஏற்காட்டின் இயற்கையை ரசிக்கின் றனர். அதிலும், நடப்பு மாதம் ஆங்காங்கே மழை பெய்து வரு வதால் இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை அதி கரித்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலை திடீரென மேகக் கூட்டம் வந்து தரையை போர்த்தி யது போல், பனிமூட்டம் காணப் பட்டது. ஏரி பகுதியில் உள்ள ஒண்டி க்கடை ரவுண்டானாவில் சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது. இதனால், அவ்வழியே சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. மலைப்பாதையில் ஆங் காங்கே மேகக்கூட்டங்கள் தரை யிறங்கியது போல், பனிமூட்டம் நகர்ந்து சென்றது. பனிமூட்டம் காரணமாக, ஏற்காட்டில் இதமான குளிர் நிலவுகிறது. மேலும் சாரல் மழையும் பெய்தது. சுற்றுலா பயணிகள், பனிமூட்டம், இதமான  குளிரோடு பெய்தசாரல் மழையை ரசித்து மகிழ்ந்தனர்.