மதுரை, ஏப்.23- மதுரை மேற்கு தாலுகா, திருப்பரங் குன்றம் ஒன்றியம் துவரிமானில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சுகாதார திரு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி வரவேற்றார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விழாவை துவக்கி வைத்து பேசினார். மேலும் தமிழக அரசின் புதிய காப்பீட்டு அட்டைகளையும் பயனாளிகளுக்கு வழங் கினார்கள். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன் தலைமையில் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு பல் வேறு வகையான பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். பல்வேறு துறை களின் சார்பில் கண்காட்சியும் நடைபெற் றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர், வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், லோகாம்பாள், ஊராட்சி செயலர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி., செய்தி யாளர்களிடம் கூறுகையில், சுகாதார திரு விழா மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 வட்டாரங்களில் நடைபெற வுள்ளது. சுகாதாரத்துறைக்கும் பொது மக்களுக்கும் இடையிலான இடைவெளி யை குறைத்து அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவ சேவைகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த சுகா தார திருவிழா நடத்தப்படுகிறது. இதனால், அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.