districts

மதுரை முக்கிய செய்திகள்

 ஜுனியர் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு 

தூத்துக்குடி,மார்ச்  26  கோவில்பட்டியில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி தேர்வு 26, 27 தேதிகளில் கோவில்பட்டி எஸ்டிஏடி   ஹாக்கி மைதானத்தில்  நடைபெறுகிறது. .மாநில அணி தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் 1.1.2003 க்குப் பின் பிறந்த வராக இருக்க வேண்டும் பிறப்புச் சான்றிதழ் , பத்தா வது மதிப்பெண் பட்டியல்,ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும் எனவும் , தேர்வு செய்யப்படும் தமிழக அணி மே 18 முதல் 29 வரை கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாட உள்ளனர் என்பதை ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ .மனோ கரன், செயலாளர் முனைவர் செந்தில் ராஜ்குமார் ஆகி யோர் தெரிவித்துள்ளனர். 

தினசரி மார்க்கெட் கட்டிட  இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி,மார்ச்  26  திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் காந்தி தினசரி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் டில் உள்ள கடைகள் அனைத்தும் தற்போது குடிசை மற்றும் ஆஸ்பெட்டாஸ் சீட்டினால் உள்ளது. இந்நிலை யில் தற்போது உள்ள மார்க்கெட்டின் வடக்கு பகுதி யில் ரூ.3 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புதிதாக 148 கடைகள் காங்கிரீட் கட்டிடமாக கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கட் கிழமை நடக்கிறது. புதிதாக கடைகள் கட்டப்படும் இடத்தை வெள்ளியன்று தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா  ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதே இடத்தில் கூடுதலாக 148 கடைகள் அமைப்ப தற்கும், அதே பகுதியில் புதிதாக ஆம்னி பஸ்நிலை யம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்ய நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பின்னர் திருச் செந்தூர் கீழப்புதுத்தெருவில் இருந்து எடிசன் ஆஸ் பத்திரி அருகில் உள்ள கால்வாய் வரை பாதாள சாக்க டைத்திட்ட பணிக்காக புதிதாக குழாய் அமைப்பதற்கு உடனடியாக திட்ட மதிப்பீடு செய்து, அப்பணியை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை  ரூ. 3 கோடியே 28 லட்சம் 

தூத்துக்குடி,மார்ச்  26  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வெள்ளியன்று நடந்தது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தலைமை தாங்கினார். கோவில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் ரோஜாலி சுமதா (தூத்துக்குடி), சங்கர் (நெல்லை), வெங்கடேஷ் (திருச்செந்தூர்), ஆய்வாளர்கள் செந்தில் நாயகி, நம்பி, இசக்கிசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிரந்தர உண்டியலில் ரூ.3 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 811-ம், கோசாலை பராமரிப்பு உண்டியலில் ரூ.1 லட்சத்து 42 ஆயி ரத்து 120-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.18 ஆயிரத்து 64-ம், கோவில் உண்டியலில் ரூ.15 லட்சத்து 39 ஆயிரத்து 78-ம் என மொத்தம் ரூ.3 கோடியே 28 லட்சத்து 89 ஆயிரத்து 73-ஐ பக்தர்கள் காணிக் கையாக செலுத்தி இருந்தனர். 

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

களியக்காவிளை. மார்ச் 26- கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே மூவோட்டு கோணம் பகு தியை சார்ந்தவர் சுகுமாரன் நாயர் (80) ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரு டைய இரண்டு கால்களிலும்  யானைக்கால் நோய் உள்ளது. இதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  நோய்க்கு எவ்வளவு சிகிச்சை பெற்றும் குண மடையாததினால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டர். இந்த நிலையில் வெள்ளி யன்று (மார்ச் 25) இரவு அவர் சாப்பிட்டு விட்டு தனது அறையில் தூங்க சென்றுள் ளார். காலையில் பக்கத்தில் உள்ள ரப்பர் தோட்டத்தில்  தூக்கில் தொங்கிய நிலை யில் காணப்பட்டார். இது குறித்து பளுகல் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு உடற் கூராய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.74 ஆக உயர்வு

திருநெல்வேலி ,மார்ச் 26- 5 நாட்களில் 4-வது முறையாக விலை அதிகரித்ததைத் தொடர்ந்து நெல்லை மாநகரில் சனியன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.74 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மாற்றத்தை பொருத்து இந்தியா விலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை மாற்றம் அடைந்து வருகிறது.தினந்தோறும் பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது.கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கியாஸ் சிலிண்டர் விலையும் ரூ.50 உயர்ந்தது. இந்த திடீர் உயர்வால் பொது மக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி யடைந்தனர்.தொடர்ந்து மறுநாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. வியாழனன்று விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் வெள்ளியன்றுமீண்டும் அவற்றின் விலை உயர்ந்தது. சனியன்று 4-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்ந் துள்ளது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங் களிலும் கடந்த 5 நாட்களில் 4-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மாவட்டத்தை பொறுத்த வரை வெள்ளியன்று மாநகர பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.98 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.08 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை பெட்ரோல் லிட்டர் 76 காசுகள் உயர்ந்து ரூ.104.74 காசுகளுக்கு விற்கப்பட்டது. இதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.94.84 காசாக இருந்தது.மாநகரில் சனிக்கிழமை  பெட்ரோல் லிட்டர் ரூ.104.72 காசுகளாகவும், டீசல் லிட்டர் ரூ.94.80 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.