districts

மதுரை முக்கிய செய்திகள்

நூதன முறையில்  ரூ.2.30 லட்சம் மோசடி

விருதுநகர், மார்ச் 10- சிவகாசி, இந்திரா நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சங்கரநாராயணன் (35). இவரது கைப்பேசிக்கு திடீரென குறுஞ்செய்து ஒன்று வந்துள்ளது. இதில், தங்களது வங்கி கணக்குடன் பான் கார்டை இணைக்கவில்லை. அவ்வாறு செய்யா விட்டால் கணக்கு துண்டிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதனால், அதிர்ச்சியடைந்த சங்கர நாராயணன், அந்த எண்ணில் இருந்து வந்திருந்த இணைப்பிற்குள் சென்று, பான்கார்டை அப்டேட் செய்துள்ளார். பின்பு, ஏராளமான ஒருமுறை கடவு எண்கள் வந்துள்ளன. இதை அவர் தொடர்ந்து அனுப்பியுள்ளார்.  சிறிது நேரத்தில், தனியார் நிறு வனத்தில் ரூ.2.30 லட்சத்திற்கு பொருட் கள் வாங்கியுள்ளீர்கள் என பேசி யுள்ளனர். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சங்கர நாராயணன், விருதுநகரில் உள்ள சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து நூதன முறையில் மோசடி செய்த குற்றவாளி யைத் தேடி வருகின்றனர்.

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

விருதுநகர், மார்ச் 10- மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம்,  சந்தையூரைச் சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி(49). இவர் தனது மகள் நாகலட்சுமி யை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே வந்து கொண்டி ருந்தார். அப்போது, அதே திசையில் வந்த லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சுந்தரமூர்த்தி படுகாய மடைந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர், அவரை  மீட்டு ஆம்புலன்சு மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். ஆனால், சிகிச்சை பலனின்றி சுந்தர மூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில், விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் நந்தகோபால்(26) என்பவரை கைது செய்தனர்.

ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட  வாகனத்தால் சாலை சேதம்

தேனி, மார்ச் 10- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஜி.உசிலம்பட்டி கிராமத்திலிருந்து 1.6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேலுச்சாமிபுரம் கிராமம் வரை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.30 லட்சம் செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது ஜி.உசிலம்பட்டி அருகே ஒக்க ரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கண்மாயில் தூர்வாரும் பணி தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக சுமார் ரூ.3 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது‌. இப்பணிக்காக தனியார் தொண்டு நிறுவனத்தினர் இரும்பு செயின் பற்களுடன் கூடிய சக்கரத்தை கொண்ட ஹிட்டாச்சி வாகனத்தை பயன்படுத்த திட்டமிட்டு, வாகனத்தை ஜி.உசிலம்பட்டி முதல் கண்மாய் வரை உள்ள சுமார் 1 கி.மீ சாலையில் இயக்கப்பட்டது. இத்தகைய வாகனங்கள் தார் சாலைகளில் இயக்குவதற்கு ஏற்கனவே தடை இருப்பது தெரிந்தும், ஒப்பந்த கார்களின் அலட்சியப் போக்கால், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட புதிய தார் சாலையில் ஹிட்டாச்சி வாகனம் கொண்டு செல்லப்பட்ட வழியில் சாலையின் பல இடங்களில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கம்பம் அரசு மருத்துவமனையில்  காயகல்ப் மருத்துவக் குழு ஆய்வு

தேனி, மார்ச் 10- கம்பம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி கள், மருத்துவ வசதிகள் குறித்து ‘காயகல்ப்’ மருத்துவக் குழுவினர் வியாழனன்று ஆய்வு நடத்தினர். அரசு மருத்துவமனைகளில் காணப்படும் உள்கட்ட மைப்பு வசதிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், குறைபாடுகள், சுற்றுப்புற சுகாதாரம், மருத்து வமனையில் தேவைகள் குறித்து தமிழக அளவில் ‘காய கல்ப்’ எனப்படும் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து மதிப்பெண்கள் அளித்து வருகின்றனர். மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு நிதியுதவி அளிக்கும். இதுதொடர்பாக, ஊட்டி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணியன் தலைமையான மருத்து வக் குழுவினரும், ஊத்தாங்கரை மற்றும் பண்ருட்டி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் குழுவினர் கம்பம்  அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.  இதில் கம்பம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் பொன்னரசன் முன்னிலையில், குழந்தைகள் பிரசவ வார்டு, ஆண்கள்-  பெண்கள் உள் நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, குழந்தை கள் சிகிச்சை, காசநோய்ப் பிரிவு, பிரேதப் பரிசோத னைக் கூடம்,உணவகம் தயாரிக்கும் இடம்,சலவை அறை, தண்ணீர் தொட்டி,மருத்துவ கழிவுகளை கையாளும் முறை, பதிவேடுகள் கையாளும் முறை, எலி, நாய் மற்றும் கால்நடை நடமாட்டத்தை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.  பின்னர் சித்த மருத்துவப் பிரிவின் மூலிகைத் தோட்டத் துக்குச் சென்ற குழுவினர், அங்கு வளர்க்கப்படும் 50க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் குறித்தும் ஆய்வு செய்த னர்.

மணல் திருட்டை காட்டிக் கொடுத்ததாக  முதியவர் கொலை: வாலிபர் கைது

திருவில்லிபுத்தூர், மார்ச் 10-  வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் முருகன். இவர் சம்ப வத்தன்று அர்ச்சுனாபுரம் ஓடையில் தனது டூவீலரில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த வத்திராயிருப்பு காவல்துறை யினர் அந்த பகுதிக்கு சென்று முருகனை சுற்றி வளைத்த னர். ஆனால் முருகன் அவரது மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.  இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அதே இடத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி மாரியப்பன் (52) என்பவர் தனது மைத்துனர் சுந்தர்ராஜ் மகன் நல்லதம்பி (27) ஆகி யோருடன் அர்ச்சுனாபுரம் பழைய பள்ளிக்கூடம் அருகே பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது மணல் திருட்டில் தப்பிய முருகன் கையில் அரிவாளுடன் வந்து மாரியப்பனை வழிமறித்து மணல் திருடியதாக தகவல் கொடுத்தது நீ தான் எனக் கூறி அரி வாளால் மாரியப்பனை  சரமாரியாக வெட்டினார்.  இதனை தடுக்க சென்ற சுந்தர்ராஜன், நல்லதம்பி ஆகியோரை கொலை செய்து விடுவேன் என  மிரட்டி யுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் ஆபத்தான நிலையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயி ரிழந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

பைக் பாறையில்  மோதி வாலிபர் பலி 

நத்தம், மார்ச்.10- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே யுள்ள கோபால்பட்டி கணவாய்ப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நத்தத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற வாலிபர் நிலைதடுமாறி அருகில் இருந்த பாறையில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சாணார்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே தனியார் மதுபானக்  கூடத்தில் ஓட்டுநர் கொலை: 2 பேர் கைது

விருதுநகர், மார்ச்.10- விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை யில் தனியார் மதுபானக் கூடத்தில் ஓட்டு நர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராமர் (35), டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இராஜேஸ்வரன் (32). கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர், டிராக்டர் ஓட்டிச் சென்றபோது ராஜேஸ்வர னின் ஆட்டோ மீது மோதியதாம். இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே ஊரைச்சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் கருப்பசாமி (27) என்பவருடனும், ராம ருக்கு பிரச்சனை ஏற்பட்டது. இந்தநிலையில் புதனன்று இரவு விருது நகர்-தாதம் பட்டி சாலையில் உள்ள தனி யார் மதுபானக் கூடத்தில்,  ராமர் மது குடித் துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு  கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரன் வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து ராமருடன் தக ராறு செய்ததோடு, கத்தியாலும்,  மது பாட்டிலை உடைத்தும் ராமரை குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்ட தாக கூறப்படுகிறது. இதையடுத்து படு காயமடைந்த ராமரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே ராமர் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து ராமர் மனைவி ரம்யா என்பவர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறை யினர் வழக்குபதிந்து கருப்பசாமி மற்றும் ராஜேஸ்வரனை  கைது செய்தனர்.