நெல் மூடைகளை பாதுகாக்க குடோன் அமைக்க கோரிக்கை
இராமநாதபுரம், ஏப்.23- இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் தாலுகாவில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் மூடை களை பாதுகாக்க குடோன் வசதிகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் முது குளத்தூர் தாலுகா செயலாளர் முருகன் கூறுகையில், சமீபத்தில் பெய்த மழை யின் காரணமாக நெல் மூடைகள் முளைத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே உடனுக்குடன் வாகன வசதிகள் ஏற்பாடு செய்து எடுத்துச் செல்ல வேண்டும், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும்போது குவிண்டா லுக்கு ரூ.50 முதல் 150 வரை பணம் பிடித்தம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விசா ரித்து பணம் பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும். நெல்கொள்முதல் ஊராட்சி அளவில் விரிவடைந்த முறையில் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.
இளைஞர் மர்ம மரணம்: மறு விசாரணை துவக்கம்
திருவாரூர், ஏப்.22- திருவாரூர் அலிவலம் ஊராட்சியில் வசித்து வரும் ஆர்.கனகவள்ளியின் கண வர் மெக்கானிக் தொழில் செய்து வந்த இளைஞர் எம்.ரமேஷ் (40) மர்மமான முறையில் மரணமடைந்தார். இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல் விபத்து மரணமாக அவசரகதியில் வழக்கை முடித்து ரமேஷின் உடலை உறவினர்களை வலுக்கட்டாயமாக பெற வைத்து அடக்கம் செய்ய வைத்து விட்டனர். இதனால் கணவனை இழந்த கனகவள்ளி தனது குழந்தைகளுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 8 மாதங்களாக தனக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் ரமேஷ் குடும்பத்திற்கு ஆதர வாக களமிறங்கியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருவாரூர் வந்த மாதர் சங்க மாநில செயலாளர் பி.சுகந்தியிடம் கனகவள்ளி மனு ஒன்றை அளித்தார். அதே போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்களிடமும் மனு அளித்திருந்தார். இதன் காரணமாக சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜய குமாரை சந்தித்து உரிய மறுபுலன் விசா ரணை கோரி வலியுறுத்தினார். இதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நன்னிலம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஏ. இளங்கோவனை விசாரணை அதிகாரி யாக நியமித்து உரிய விசாரணை நடத்திட உத்தரவிட்டார். இதனையடுத்து வியாழக்கிழமை கணவனை இழந்த ஆர்.கனகவள்ளி மற்றும் அவரது சகோதரர் டி.சரவணக்குமார் ஆகி யோரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பிறகு டி.எஸ்.பி ஏ.இளங்கோவன் சம்பவம் நடந்த இடமான பாக்கம் கோட்டூர் ஊராட்சி ஜமாத் நிர்வாகிகள், வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நபர்கள், அவரது உறவி னர்கள் ஆகியோரிடம் மேலும் விவ ரங்கள் சேகரித்து உங்களுக்கு நியா யம் கிடைக்கும் வகையில் மாவட்ட கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதாக கூறினார்.
மீன்கள் விலை உயர்வு
அறந்தாங்கி, ஏப்.23 - புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதி யில் மீன்பிடி தடைக்காலம் எதிரொலி யால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. 700 கிராம் எடை கொண்ட ஒரு சிலுவை கெண்டை மீன் 150 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கூறு கொடுவா மீன் ரூ.250 லிருந்து, ரூ.450-க்கும், புள்ள முரல் ஒரு மீன் ரூ.15 லிருந்து ரூ.25-க்கும் விற்கப்படுகிறது. கடல் மீன்களின் வரத்து குறைந்துள்ள தால் குளத்து மீன்களும், வளர்ப்பு இறால் களும் விற்பனைக்கு வருகின்றன.
குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை
தேனி, ஏப்.23- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிரா மத்திற்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரெங்கசமுத்திரம் காலனி பகுதியில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வா கத்திடம் பலமுறை புகார் கூறியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத தால் கோபமடைந்த கிராம மக்கள் ரெங்க சமுத்திரம் ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட னர். இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் ரெங்கசமுத்தி ரம் காலனி பகுதியில் உடனடியாக குடி நீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.இதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கஞ்சாவுடன் ஒருவர் கைது
கடமலைக்குண்டு, ஏப்.24- தேனி மாவட்டம், வருசநாடு காவல் சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் சனிக்கிழமை சிங்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கராஜபுரம் சுடுகாடு அருகே நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிரா மத்தை சேர்ந்த அழகேசன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்த னர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கஞ்சா விற்பனையில் தொடர்புடைய ஆண்டிபட்டியை சேர்ந்த முருகன் (45) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
காவலருக்கு அடி-உதை: 2 பேர் கைது
திருவில்லிபுத்தூர், ஏப்.23- வத்திராயிருப்பு அருகே உள்ள மகா ராஜபுரம் கிராமத்தில் ஏரக்கா அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரு கிறது. இதில், வத்திராயிருப்பு காவல் நிலைய முதுநிலை காவலர் கண்ணன் என்பவர் மகாராஜபுரம் மெயின் பஜாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மகாராஜபுரம் அண்ணா நகரைச் சேர்ந்த திருப்பதி ராஜ் (26), கீழத்தெரு அருண்குமார் (26) ஆகிய இரண்டு பேரும் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு விளை விக்கும் வகையில் ஆபாசமாக பேசி கொண்டு வந்தனர். இதனை கண்ட தலைமை காவலர் கண்ணன் இரண்டு பேரையும் எச்ச ரித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த திருப்பதி ராஜனும், அருண்குமாரும் காவலர் கண்ணனை தாக்கி காயப்படுத்தினார். இதுகுறித்து வத்திரா யிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருப்பதி ராஜ், அருண் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
நத்தம், ஏப்.24- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நத்தம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வத்திபட்டி பேருந்து நிலையப் பகுதியில் இரு சக்கர வாக னத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மலர் (42) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவும், இருசக்கர வாக னமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொழில் மேம்பாட்டு பயிற்சி
இராஜபாளையம், ஏப்.23- விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யம் முதுகுடியில் பெண் தொழில் முனை வோர்களுக்கான தொழில் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இராஜபாளையத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன பொது மேலாளர் ஜோசப் ராஜ் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியினை நிறுவன முதன்மை மேலாளர் ஜெயப்பிரகாஷ் துவக்கி வைத்தார். மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. பயிற்சியில் மகளிர் 50 பேர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் கொலை வழக்கு: கோவில்பட்டி காவலர் சாட்சியம்
மதுரை, ஏப்.23- சாத்தான்குளம் தந்தை. மகன் கொலை வழக்கில் கோவில்பட்டி காவல் நிலைய காவலர் சிவக்குமார் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணி கர்களான ஜெயராஜ்,இவரது மகன் பென்னிக்கிஸ் ஆகி யோரை 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டு, காவல்துறை யினரின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சனிக்கிழமை யன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக நடைபெற்றது. அப்போது வழக்கின் சாட்சியாக கோவில்பட்டி காவல் நிலைய காவலர் சிவக்குமார் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது, கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனையின் போது உடன் இருந்த தாகவும் பென்னிக்ஸ் அணிந்திருந்த ரத்தகறை படிந்த ஆடை களை அப்போது அங்குள்ள மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த தாகவும், கூறினார். மேலும் அந்த ரத்தக்கறை படிந்த ஆடை களையும் அடையாளம் காட்டினார். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.