districts

மதுரை முக்கிய செய்திகள்

தையல் சங்கப் பேரவை 

திருவில்லிபுத்தூர், ஏப்.4-  திருவில்லிபுத்தூர் நகர் கமிட்டி சிஐடியு தையல் சங்க பேரவை தோழர் லீலாவதி நினைவகத்தில் சாந்தி தலைமையில் நடைபெற்றது. பேரவையை மாவட்ட செயலாளர் சாராள் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட நிர்வாகி பிச்சைக்கனி வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் மகாலட்சுமி நிறைவுரை யாற்றினார்.  பேரவையில், தலைவராக லட்சுமி, செயலாளராக சாந்தி, பொருளாளராக ஜெயலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

பெண்ணிடம் நூதன முறையில்  நகை மோசடி 

திருவில்லிபுத்தூர், ஏப்.4-  திருவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் சிவஞானம் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் மஞ்சனப் பேச்சி. இவர் மார்ச் 29-ஆம் தேதியன்று வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்தார். அப்போது  42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவருடன் உட்கார்ந்து பேசியுள்ளார்.  அப்போது, மூட்டு வலியால் தான் அவதிப்படுவதாக மஞ்சன பேச்சி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் சித்தர் பீடத்தில் உள்ள சித்தரை சென்று சந்தித்தால் அரை மணி நேரத்தில் மூட்டு வலி சரியாகிவிடும் என்று கூறியதை நம்பி அந்தப் பெண்ணுடன் சித்தர் பீடம் சென்றுள்ளார்.  அங்கு சித்தர் இல்லாததால் தொட்டியபட்டி என்ற கிராமத்தில் இருப்பார் என்று காட்டுவழியே கூட்டி சென்றுள்ளார். அப்போது காட்டு வழியே செல்வதால் நகைகளுக்கு ஆபத்து என்று கூறி நகைகளை வாங்கியுள்ளார். பின்னர் அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் மறித்து அந்தப் பெண் மணி மஞ்சன பேச்சியுடன் வந்துள்ளார்.  பின்னர் மஞ்சன பேச்சியை இறக்கிவிட்டு நகைகளுடன் அதே இரு சக்கர வாகனத்தில் தப்பித்து விட்டார். இதுகுறித்து மம்சாபுரம் காவல் நிலையத்தில் மஞ்சனபேச்சி புகார் அளித்துள்ளார்.

பூட்டிய வீட்டில் நகை,  பணம் கொள்ளை

மதுரை, ஏப்.4-  மதுரை மேலக்கால் சாலையில் உள்ள பிகேஎம் நகர் பகுதியை சேர்ந்த ரோஸ்லின் மேரி (54). இவரது மகன் சென்னையில் மருந்துவராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ரோஸ்லின் மேரி கடந்த அக்டோபர் மாதம் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் வசிக்கும் மகன் வீட்டுக்கு  சென்று விட்டார். நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு வந்த நபர்கள் நள்ளி ரவில் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வீட்டில் கொள்ளை போனது தொடர்பாக ரோஸ்லின் மேரிக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.  அப்போது அவர் பீரோவில் 50 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வைத்து இருந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவில்லிபுத்தூரில் இன்று மின் தடை 

திருவில்லிபுத்தூர், ஏப்.4- விருதுநகர் மாவட்டட் திருவில்லி புத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வா யன்று (ஏப்.5) நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான திருவில்லிபுத்தூர் நகர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், இந்திரா நகர், காதி போர்டு காலனி, சித்தா லம்புத்தூர், நாச்சியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோட்ட பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

தொழில்போட்டியில் வாலிபர் கொலை

தேனி, ஏப்.4- தேவதானப்பட்டி அருகில் உள்ள காமக்காபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்  (23). அதே பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (23). இவர்கள் 2 பேரும் மீன் வியாபாரிகள். கொடைக்கானலுக்கு சென்று மீன்களை வியாபாரம் செய்து வந்தனர். இதனால் தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக காமக்காபட்டி காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மன் கரகம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியாக அப்பகுதி இளைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். அப்போது விக்னேஷ் மற்றும் தனுஷ் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் பீர் பாட்டிலால் தனுசின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேசை சரமாரியாக குத்தி னார். இதை தடுக்க வந்த விக்னேசின் தம்பி தீபன் (20) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கிய விக்னேசை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது தம்பி தீபன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தனுசை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேட்டமலை ஊராட்சித் தலைவரின் காசோலை கையொப்பமிடும் அதிகாரம் பறிப்பு

விருதுநகர், ஏப்.4- சாத்தூர் அருகே மேட்ட மலை ஊராட்சிமன்றத் தலைவ ரின் காசோலைகளில் கை யொப்பமிடும் அதிகாரத்தை பறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி உத்தரவிட்டுள் ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறிய தாவது: மேட்டமலை ஊராட்சியில் செயலராக இருந்தவர் கதிரேசன். இவர், வசந்தி என்பவரிடம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு வரைபட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, காவல்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து, அவர் திருவில்லி புத்தூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதுகுறித்த ஆவணங்களை ஊராட்சிமன்றத் தலைவர் அரசுக்கு வழங்க மறுத்துள்ளார். எனவே, 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவி னர் ஊராட்சிமன்ற அலுவல கத்திற்கு சென்ற போது, ஊராட்சி மன்றத் தலைவர் கதவை பூட்டிச் சென்று விசாரணை செய்ய விடாமல் செய்துள்ளார். எனவே, வி.ஏ.ஓ முன்னிலையில் கதவு திறக்கப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அதில், ஊராட்சிமன்ற அலு வலகத்தில் பராமரிக்க வேண்டிய ஆவணங்கள் இல்லை. மேலும், வரவு-செலவு கணக்கு களை ஆய்வு செய்ய விடாமல்  மன்றத் தலைவர் செயல்பட்டுள் ளார். பொதுமக்களுக்கு அடிப்படை கடமைகளை செய்வ தில் தவறியுள்ளார். எனவே, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை ஊராட்சியின் காசோலைகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளில் கையொப்பமிடும் அதிகாரம் சாத்தூர் பி.டி.ஓ (கி.ஊ) க்கு வழங்கப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: கைதான 4 பேருக்கு ஏப்.18 வரை நீதிமன்ற காவல்

திருவில்லிபுத்தூர் ,ஏப்.4- விருதுநகர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் 4 பேரையும் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் இளம்பெண் கும்பலால் பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விருதுநகரைச் சேர்ந்த நான்கு பேரை  கைது செய்து, சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  திருவில்லிபுத்தூர் வன்கொடுமை நீதி மன்றத்தில்  ஏப்ரல் 4 அன்று நான்கு பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிசிஐடி தரப்பில் 4 பேரிடம் நடத்திய விசாரணை குறித்த ஆவணங்களை பெட்டியில் எடுத்து வந்து நீதிபதி முன்பு ஒப்படைத்தனர். தொடர்ந்து சிபிசிஐடி மற்றும் அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நான்கு பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நால்வரும் மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தேனி ஆட்சியரகத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

தேனி, ஏப்.4- தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியை சேர்ந்து வைக்க கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காவல்துறையினர் விசாரணை செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆண்டிபட்டி மரிக்குண்டு அருகே வீரசின்னம்மாள்புரத்தை சேர்ந்தவர் மதுரை வீரன் மகன் ஈஸ்வரன் (36). இவர் மனைவி பிரிந்து வேறு ஒருவ ருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மனைவியை சேர்ந்து வைக்கக் கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயன்றார்.  பணியில் இருந்த காவலர்கள் அவரை காப்பாற்றி தேனி காவல்நிலை யத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர் .பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினார்.

பல்நோக்கு ஒப்பந்த பணியாளர்களுக்கு  பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப்.4- மதுரை அரசு ராஜாஜி பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்று பரவலின் போது தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக 70 பேர் கொரோனா தடுப்பு பணியில் சேர்ந்துள்ளனர். 3 மாதத்தில் அந்த ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு வழங்கப் படும் நிதியில் ஊதியம் 3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்ட சூழலிலும் குடும்ப சூழல் காரணமாக, கடுமை யான அச்சத்திற்கு மத்தியில் கொரோனாவால் இறந்தவர்க ளின் உடலை எடுத்து பேக் செய்வது போன்ற கடினமான பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் இவர்கள் அனைவருக்கும் பணி முடிந்து விட்டதாக அரசு மருத்துவ மனை நிர்வாகம் மூலம் திடீரென தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதனால் இந்த வேலையை நம்பி பணிபுரிந்து வந்த 70 குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி உள்ளது.  இதனால் ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.