சென்னை, ஆக. 8- நீர்வளத்துறை திட்ட உருவாக்க பொறியாளர்க ளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.பி.எஸ். கருவிகளை வழங்கினார். நீர் வளத்துறை சார்பில், நீர்வளத்துறை திட்ட உரு வாக்க பொறியாளர்களுக்கு டி.ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் 214 கையடக்க ஜி.பி.எஸ். கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலை மைச் செயலகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு, நீர் வளத்துறை திட்ட உருவாக்க பொறியாளர்களுக்கு டி.ஜி.பி.எஸ். மற்றும் ஜி.பி. எஸ். கருவிகளை வழங்கி னார். இதில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட் டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு வன உயிரின குற்றக் கட்டுப்பாட்டு வாரி யத்தின் இலச்சினையை, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டார். தமிழ் நாட்டில் காடுகள் மற்றும் காட்டுயிர்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் வகையில், புதிய பிரிவை தொடங்கி வைத்த முதல மைச்சர் அதன் இலச்சினை யையும், யானைகள் எண்ணிக்கை கணக்கீடு அறிக்கையையும் வெளி யிட்டார். அத்துடன் வன உயிரின குற்றங்கள் தொடர் பான புகார்களுக்கு, கட்டணமில்லா வாட்ஸ்அப் எண் மற்றும் இணையதள சேவையையும் தொடங்கி வைத்தார். இதில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.