பழனி,ஏப்.20- பழனி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயிலில் உரிமம் பெற்ற சிகை தொழிலாளர்களை கோயில் ஊழியராக்க வேண்டும் எனவும் மாத ஊதியம் வழங்கக் கோரியும் நிலுவையிலுள்ள அனுமதி அட்டையை லைசென்ஸ் மாறுதல் செய்து கொடுக்க வேண்டியும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதற்கு பழனி கோயில் தொழிலாளர் சங்க செயலாளர் எஸ்.நாட்ராயன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சோ.மோகனா, முன்னாள் நகர்மன்றத் தலை வர் ராஜமாணிக்கம், கே.பிரபாகரன், சிஐடியு கன்வீனர் பிச்சைமுத்து, ஆகியோர் கலந்து கொண்டனர்.