நலத்திட்ட உதவிகள் வழங்கல்
இராமநாதபுரம், அக்.31- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் னில் திங்களன்று (30.10.2023) பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபங்களுக்கும், ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் தளம், தார் சாலை மற்றும் விரிவாக்கப்பணிகளுக்கும், ரூ.35 கோடி மதிப்பீட்டில் பார்த்திபனூரில் 3.6 கிலோ மீட்டர் தூரம் புறவழிச்சாலைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன், சட்ட மன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், இராம.கருமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இலவச வீட்டு மனை பட்டா 19 பயனாளிகளுக்கும், நலத்திட்ட உதவிகள் 117 பயனாளிகளுக்கும் வழங்கப் பட்டது.
குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
திருவில்லிபுத்தூர், அக்.31- திருவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளி 141 ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் பழைய மாணவர் எம்.எஸ்.செந்தில் குமார் கலந்து கொண்டார். மேலும் பள்ளித் தேர்வுகளில் முதல் இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா விற்கு பள்ளியின் செயலர் டி.ஏ.எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை கல்யாணி நன்றி கூறினார்.
பழனியில் தமுஎகச நூல் வெளியீட்டு விழா
பழனி, அக்.31- பழனியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பேரா.மீனா சுந்தர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நூல்களை வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார். மாவட்டத் தலைவர் வரத. ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர் கவிஞர் தாமோதரன், மாநி லக்குழு உறுப்பினர் இரா.இராஜேந்திரன் செயலாளர் பழனிக்குமார் ஆகியோர் பேசினர். இளங்கோ நன்றி கூறினார்.
மகளிர் உரிமைத் தொகை கோரி ஆட்சியரிடம் மனு
திண்டுக்கல், அக்.31- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேல்வார்கோட்டை பகுதியில் உள்ள புது கல்ராம் பட்டியைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்று கூறி திண்டுக்கல் ஆட்சியரி டம் திங்களன்று மனு அளித்தனர். திண்டுக்கல் ஆட்சியரகத்தில் மனுநீதி நாளன்று வேல்வார்கோட்டை, புது கலராம்பட்டி ஆகிய பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்களது கிராமத்தில் சுமார் 100 குடும்பங்க ளுக்கு மகளிர் உரிமை தொகை வரவில்லை. அங்கு வந்த அரசு பணியாளர்கள் எங்கள் கிராமத்திற்கு எந்த உதவி யும் செய்யவில்லை. தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அடிப்படை வசதிகளை செய்து தராத ஸ்ரீராமபுரம் பேரூராட்சி
சிபிஎம் பெண் கவுன்சிலர் தர்ணா
சின்னாளப்பட்டி, அக்.31- திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. பேரூ ராட்சித் தலைவராக சகிலா ராஜா உள்ளார். இந்த பேரூராட்சி மன்றத் தின் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது இதில் போளி யம்மனூரைச் சேர்ந்த 9-வது வார்டு சிபிஎம் கவுன்சிலர் மாலதி, ‘தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சுகா தார வளாகம் ரூ.6 லட்சம் செலவில் மராமத்து பணி முடிந்தும் அதனை பேரூ ராட்சி நிர்வாகம் பயன்பாட் டிற்கு கொண்டு வராமல் காலதாமதம் செய்கிறது என்றும், பலமுறை பேரூ ராட்சி நிர்வாகத்திலும், பொதுமக்கள் சார்பிலும் கூறி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என் றும் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
கஞ்சா கடத்தல் வழக்கு: அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு
மதுரை, அக்.31- கஞ்சா கடத்தல் வழக்கில் நீதிமன்றத் தின் உத்தரவை நிறைவேற்ற அரசால் எடுக் கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரி யது என்று நீதிபதி பாராட்டு தெரிவித்தார். கஞ்சா கடத்தியதாக தன் மீது 2018 ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு எனக்கு சொந்தமான ஜீப் வாகனம் காவல்துறை யால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற் போது வழக்கு விசாரணை நடைபெற்று வரு வதால் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள தனது வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நாகூர்கனி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதி தமிழகத்தில் போதை பொருள் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எத்தனை வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. எத்தனை வாக னங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட் டுள்ளன. எத்தனை வாகனங்களை திரும்ப உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் போதை ஒழிப்பு குழு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளரா என பல்வேறு கேள்விகளை எழுப்பி இதற்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு செவ்வாயன்று நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசார ணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு கூடுதல் குற்ற வியல் வழக்கறிஞர் டி.செந்தில்குமார் ஆஜ ராகி தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவின் படி போதை பொருள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முறைப்படுத்த சிறப்பு அதிகாரி பெனாசிர் பாத்திமா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிமன்றம் ஏற்கனவே போதை தடுப்பு வழக்குகளின் நிலை குறித்த விவ ரங்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தும் வித மாக அனைத்து காவல்துறை கண்கா ணிப்பாளர் மற்றும் காவல்துறை ஆணை யர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமி ழகத்தில் இதுவரை போதை பொருள் கடத்தியதாக மொத்தம் 3688 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறி முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நீதிமன்ற உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்ட 710 வாகனங்கள் நீதிமன்றம் மூலம் உரிய வர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
191 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்ப டைப்பதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 2787 வாகனங்கள் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. உரிமை கோராத வாகனங்களில் 1467 வாகனங்களை நீதி மன்ற மூலம் ஏலம் விடுவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டது. மீத முள்ள 1320 வாகனங்கள் ஏலம் விடுவ தற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. அதற்கு கால அவகாசம் வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டி ருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதி உயர்நீதி மன்ற உத்தரவின்படி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் கண்ட றிந்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரி NIBCID DSP ச.பெனாசிர் பாத்திமாவை நிய மனம் செய்த தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது என தெரிவித்தார். மேலும் வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. இதே போல் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ள 1320 வாகனங்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.