திருவில்லிபுத்தூர், டிச.11- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 34வது பட்ட மளிப்பு விழா பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமை யில் நடைபெற்றது. இதில், பல் கலை இணைவேந்தர் டாக்டர் அறி வழகி ஸ்ரீதரன், துணைத்தலை வர்கள் முனைவர் எஸ்.சசி ஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம், நிர் வாகக்குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜி.சுவாமிநாதன், ஆலோசகர் எஸ். ஞானசேகர், துணைவேந்தர் முனை வர் ஆர்.நாகராஜ், பதிவாளர் முனை வர் வெ.வாசுதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். இந்திய புள்ளியியல் நிறுவன இயக்குநர் முனைவர் சங்கமித்ரா பண்டோபாத்யா 1,740 மாணவர் களுக்கு பட்டங்களை வழங்கி உரை ஆற்றினார். சென்னை, ஐபிஎம் கம்பெனி இயக்குநர் சுப்ரமணி ராமகிருஷ் ணன், மாலையில் நடைபெற்ற விழா வில் பட்டங்களை வழங்கினார். விழா ஏற்பாடுகளை பட்டமளிப்பு விழாக் குழு பேராசிரியர்கள் சிறப் பாக செய்திருந்தனர்.