கடமலைக்குண்டு, மார்ச் 14- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள் ளது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலை யில் எந்த ஆண்டும் இல்லாத அளவு விலை மிக குறைவாக காணப்படுகிறது. தற்போது 50 ரூபாய் வரை மட்டுமே இலவம் பஞ்சு விற்பனையாகிறது. இதனால் விவசாயி களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள் ளது. இதனால் பெரும்பாலான விவசாயி கள் இலவம் பஞ்சு காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர். இதே போல கடந்த 3 ஆண்டுகளாக கொட்டை முந்திரியின் விலையும் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று வருசநாடு கிராமத்தில் விவசாயிகள் சார்பில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட் டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் போஸ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வன விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இலவம் பஞ்சு 1 கிலோ 120 ரூபாய் எனவும் கொட்டை முந்திரி 1 கிலோ 110 ரூபாய் எனவும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தங்கம்மாள் புரம் கிராமத்தில் பயன்பாடு இல்லாமல் காணப்படும் குடோனை திறந்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அரசே கொட்டைமுந்திரி மற்றும் இலவம் பஞ்சை கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தர கர்களின் நெருக்கடியில் இருந்து விவசாயி களை பாதுகாக்கும் வகையில் பெரியகுளம் ஆர்.டி.ஓ, தோட்டக்கலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை இணைத்து குழு அமைத்து அதன் மூலம் விவசாயி களில் கடன் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் வருகின்ற 24 ஆம் தேதி அன்று கட மலை-மயிலை ஒன்றிய விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப் போவதாக முடிவு செய்யப் பட்டது.