திண்டுக்கல், ஏப்.26- நிலுவை கோரிக்கைகளை நிறை வேற்றாத தமிழக அரசு கண்டித்தும் கோரிக் கைகளை நிறைவேற்றக்கோரியும அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் சார்பாக திண் டுக்கல் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன் பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முருகா னந்தம் தலைமை வகித்தார் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி மாவட்டச் செயலாளர் விவேகானந்தன் வட்ட துணைத் தலைவர் பாண்டி வட்ட செயலா ளர் ஜெசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேனி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேனி ஐடிஐ ,கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கம்பம் வேளாண்மைத் துறை அலுவலகம், பாளையம் தாலுகா அலுவல கம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பெ.பேயத்தேவன், மாவட்டச் செய லாளர் தாஜுதீன், கலைச்செல்வி, ராமலிங் கம், ஜோதிபாசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர் . மதுரை மதுரை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக கவனஈர்ப்பு ஆர்ப் பாட்டம் புதனன்று நடைபெற்றது இதில் மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி, செயலா ளர் க. நீதிராஜா, பொருளாளர் க. சந்திர போஸ், மாநில செயற்குழு உறுப்பினர் இரா. தமிழ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.