விருதுநகர், டிச.13- விருதுநகர் அருகே உள்ள மேலா மத்தூர் கிராமம் வழியாக அரசுப் பேருந்து வந்து செல்ல வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைத்த கோரிக்கை வெற்றியடைந்துள்ளது. விருதுநகர் அருகே உள்ளது மேலா மத்தூர் கிராமம். இங்குள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர அரசுப் பேருந்து வசதி இல்லை. குறிப்பாக மாலை நேரத்தில் தங்களது வீடு களுக்கு வருவதற்கு மாணவ, மாணவிக ளும், பணி நிமித்தமாக வெளியூர் சென்று வருவோரும் பெரும் சிரமடைந்தனர். எனவே, அரசுப் பேருந்து வசதி செய்து தர வேண்டுமென விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், மாவட்ட ஆட்சியர், போக்குவரத் துக் கழக மேலாளர் உட்பட பலருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த டிசம்பர் 12 அன்று மாலை மேலாமத்தூர் கிராமம் வழியாக அரசுப் பேருந்து சேவை தொடங்கப் பட்டது. கிராமத்திற்கு வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் வரவேற்பு அளித்தனர். மேலும், ஓட்டுநர், நடத்துந ருக்கு கைத்தறி ஆடை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பி னர் கே.ராஜேந்திரன், சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி, கிளை செயலாளர் எஸ்.மணிகண்டன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.