districts

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் என்ன கிடைத்தது என ஆளுநர் ரவி விளக்க வேண்டும்

விருதுநகர், ஜூன் 7- அதிக அளவில் வெளிநாட்டுப் பயணம் செய்த பிரதமர் மோடியால் இந்தியாவிற்கு என்ன கிடைத்தது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளிக்க வேண்டும் என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்  விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக் கம்தாகூர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தென்காசி மக்க ளவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் சீனிவாசன்( விருதுநகர்), ஜி.அசோகன் (சிவகாசி) ரகுராமன்( சாத்தூர்), சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் நிறைவடைந்தவுடன் ப.மாணிக் கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறுகையில், விருதுநகர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை குறித்தும், உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ளார் என்றார். வெளிநாட்டு பயணங்கால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லையென ஆளுநர் ரவி  கூறியது பற்றிய கேள்விக்கு?, தமிழக ஆளு நர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடி சென்று வந்த வெளிநாட்டு பயணங்கள் பற்றி கூறுகிறார். தமிழக முதல்வரின் பயணத்தை பற்றி கூற வில்லை. பொத்தாம் பொதுவாக வெளி நாடு களுக்கு செல்வதால் மாநிலங்களுக்கு நன்மை  கிடைக்காது என பேசியுள்ளார். அவர், பிரத மர் மோடியை குற்றம் சொல்கிறார் என  நினைக்கிறேன். பிரதமர் மோடி 9 ஆண்டு களாக சுற்றாத ஊரே கிடையாது. போகாத நாடே கிடையாது. அவர் பேசாத பேச்சே கிடையாது. மோடி வெளி நாடுகளுக்கு சென்று இந்தியா விற்காக என்ன கொண்டு வந்தார் என ஆளு நர் ஆர்.என்.ரவி கேட்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. ஆளுநர் பணியை விட பாஜகவின் மாநிலத் தலைவர் செய்யும் பணியைப் போல தொடர்ந்து சர்ச்சைக்குரிய விசயத்தை பேசி வருகிறார்.

 ஆளுநர் மாளிகையை காலி செய்து விட்டு கமலாலாயம் விரைவில் அவருடயை அலு வலகமாக மாறும் என தெரிகிறது. இதுபோன்ற ஆளுநரை தமிழகம் சந்தித்ததில்லை என்றார். ஆவினை அழிக்க அமித்ஷா சதி   குஜராத்தின் அமுல் மூலம் தமிழ்நாட்டின் ஆவினை காலி செய்வதற்கும், அதன் உண்  மையான வேர்களை அறுப்பதற்கும் பாஜக அமைச்சர் அமித்ஷாவின் சதித் திட்டம் நடை பெறுகிறது. இதில் பாஜகவினருக்கும் பங்கு உள்ளது. ஆவினை மேம்படுத்த புதிய அமைச்ச ராக தேர்வு செய்துள்ள மனோ தங்கராஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஆவினில் சீர்கேடு ஏற்பட அதிமுக அரசே காரணமாகும். பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என  அதிமுக எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கூறி யுள்ளாரோ என்ற கேள்விக்கு? ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்காக என்ன செய்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுக அழிந்து வருகிறது. பாஜகவின் அடி மைகளாகவே அதிமுகவினர் உள்ளனர். அதி முக தங்களது கட்சியின் நிலையை விளக்க வேண்டும். கரைந்து வரும் கப்பலாகவும், உடைந்த மண் பாத்திரமாகவும் உள்ளது. அதி முகவின் இறுதி காலம் எழுதப்பட்டுக் கொண்டி ருக்கிறது. அதைப் பற்றி சிந்திக்காமல் பிற கட்சி களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.