districts

img

தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார்,மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் முன்னிலை விகித்தார், இதில் திமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சௌந்தர்ராஜன்,ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் திமுக, காங்கிரஸ், விசிக கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.