districts

img

15 செனட் உறுப்பினர்களை திரும்பப் பெற கேரள பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஆளுநர் அழுத்தம்

திருவனந்தபுரம், அக்.19- கேரள பல்கலை கழகத்தின் 15 செனட் உறுப்பினர்களை வாபஸ் பெற்று இன்று உத்தரவு பிறப்பிக்க ஆளுநர் ஆரிப் முகமது கான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கேரள பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர். வி.பி.மகாதேவன் பிள்ளை, ஆளுநருக்கு அக்.18 செவ்வாயன்று அனுப்பிய கடிதத்தில், செனட் உறுப்பினர்களை வாபஸ் பெறும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து ஆளுநர் தனது நிலைப்பாட்டை கடுமையாக்கினார். கடந்த 11ஆம் தேதி கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் அழைத்த செனட் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தாம் பரிந்துரைத்த 15 பேர் வாபஸ் பெறப்பட்டதாக கேரள பல்கலைக்கழக துணை வேந்தர்க்கு ஆளுநர் சனிக்கிழமை கடிதம் அனுப்பினார். அவர்களில் நான்கு பேர் பதவியில் உள்ள உறுப்பினர்கள். செனட் கூட்டத்தில் பங்கேற்க முடியாத காரணத்தை அவர்கள் தெரிவித்திருந்தனர். எனவே அவர்களைத் திரும்பப் பெற முடியாது. மற்ற 11 பேரை பதவி நீக்கம் செய்ய முதன்மை செயலாளரின் அறிவிப்பு போதுமானதாக இல்லை என்று ஆளுநருக்கு துணைவேந்தர் பதில் அளித்தார்.

ஆளுநரின் செயலாளரின் அறிவிப்பின் அடிப்படையில் பல்கலைக்கழக துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், வேந்தர் கையொப்பமிட்ட ஆவணத்தின்படி மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் விடுப்பு தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் ஆவர். எனவே, உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுப்பது சட்ட விரோதமானது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துறைத் தலைவர்கள் டாக்டர். கே.எஸ்.சந்திரசேகர் (கேரள மேலாண்மை நிறுவனம்), டாக்டர். கே.பிந்து (இசை), டாக்டர். சி.ஏ. ஷைலா (சமஸ்கிருதம்), டாக்டர். பினு ஜி பீம்நாத், திருவனந்தபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.எஸ்.சுரேஷ் பாபு, காட்டன்ஹில் அரசு. பிபிடிடிஐ முதல்வர் டி.எஸ்.யமுனாதேவி, கடைக்கால் குட்டிக்காடு சிபிஎச்எஸ்எஸ் ஆசிரியர் ஜி.கே.ஹரிகுமார், வர்க்கலா பாளையம்குன்னு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வி.அஜயகுமார், பி.ஏ. ஹாரிஸ் அறக்கட்டளை தலைவர் ஷேக் பி ஹாரிஸ், கயர் ஃப்ளக்ஸ் ஏற்றுமதி நிறுவன தலைவர் ஜாய் சுகுமாரன், கேபிடல் கலர் பார்க் உரிமையாளர் ஜி.பத்மகுமார், மலையாள தகவல் தொடர்பு செய்தி இயக்குநர் வழக்கறிஞர் ஜி.முரளிதரன் பிள்ளை, டாக்டர் பி. அசோகன் (எஸ்.பி கோட்டை மருத்துவமனை), வழக்கறிஞர் பா.பாலச்சந்திரன் ஆகியோரது உறுப்பினர் பதவியை திரும்பப் பெற வேண்டும் என்பதே ஆளுநரின் நிர்பந்தமாகும்.