திருப்பூர், மார்ச் 8 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக குடும்ப ஓய்வூதியர்களுக்கு, மாநில அரசு மருத்துவ காப்பீட்டு திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு, திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள தங்கவேல் திருமண மண்டபத்தில், கோவை அரசு போக்கு வரத்துக் கழக குடும்ப ஓய்வூதியர்கள் கோரிக்கை மாநாடு புதனன்று நடை பெற்றது. குடும்ப ஓய்வூதியர்கள் சங்க மண்டல தலைவர் எம்.பத்மினி தலை மையில் நடைபெற்ற, இந்த மாநாட் டில், மண்டல துணை பொதுச்செய லாளர் கே.லோகநாயகி வரவேற்றார். அரசு போக்குவரத்து கழக ஓய் வூதிய நலச் சங்கத்தின் மண்டல தலைவர் ஜி.பழனிச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சேதுராமன், திண்டுக்கல் பொதுச் செயலாளர் எஸ். கஸ்பர் ராஜ், கோவை பொதுச் செய லாளர் பி.செல்வராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.பவித்ராதேவி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன் னாள் மாநிலச் செயலாளர் ஏ.நிசார் அகமது ஆகியோர் கருத்துரை வழங் கினர்.
இந்த மாநாட்டில், போக்குவரத்து கழகத்தின் பணியாற்றி, ஓய்வு பெற்ற பிறகும் இறந்தவர்களின் வாரிசு களான குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல் படுத்தாதது அநீதியாகும். எனவே, அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட் டத்தை மாநில அரசு அமல்படுத்துவ துடன், மருத்துவப்படி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பிபிஓ ஆணை யை கால தாமதம் செய்யாமல் உடனடி யாக வழங்க வேண்டும், போக்குவரத்து கழகத்தின் நேரம் காலம் பாராமல் பாடு பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசு களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், வாரிசு வேலைக்கு மாற்று உறுப்பினரை ஏற்க மறுக்கக்கூடாது. மற்ற அரசுத் துறை களின் ஓய்வூதியர்களை விட ரூ.8000 முதல் போக்குவரத்து குடும்ப ஓய்வூதி யர்களுக்கு குறைத்து வழங்கி வரும் நிலையில், குடும்ப ஓய்வூதிய உச்ச வரம்பை கைவிட வேண்டும். ஓய்வூதிய நிலுவைகளை உடனே வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு போக்கு வரத்துக் கழக குடும்ப ஓய்வூதியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குடும்ப ஓய்வூதியர் சங்க மண்டல பொருளாளர் எம்.பேபி நன்றி கூறி னார்.