districts

img

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜுலை 9- 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே  துவக்க வேண்டும். பே மேட்  ரிப் முறையில் ஊதிய ஒப் பந்தம் ஏற்படுத்த வேண்டும். தனியார் மயத்தை கைவிட  வேண்டும். கடந்த 2 ஆண்டு களாக விருப்ப ஓய்வில் சென்  றவர்களுக்கும், இறந்து போனவர்களுக்கும், ஓய்வு  பெற்றவர்களுக்கும் பணப் பலன்களை தர வேண்டும்.ஓய்வு பெற்றவர்களுக்கு 80 மாதமாக வழங்க வேண்டிய அகவிலைப்படியை வழங் காமல் இழுத்தடிக்கும் போக்  கைக் கண்டித்தும் திண்டுக்  கல்லில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  திண்டுக்கல் யூனிட் 1 கிளை முன்பாக சிஐடியு சார்  பாக நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்திற்கு மண்டலத்தலைவர் ஐ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலா ளர் என்.ராமநாதன், பொரு ளாளர் ஜோசப் அருளாந் தம், சம்மேளன துணை பொதுச்செயலாளர் தயானந்  தம், மண்டல துணைப்பொதுச்  செயலாளர் ஜி.வெங்கிடு சாமி உள்ளிட்டோர் பேசினர். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பாக தனசாமி ஆதரித்துப் பேசி னார்.              (ந.நி.)