தேனி, மார்ச் 28- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தமி ழக அரசின் காலை சிற்றுண்டி திட் டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். மாநக ராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணி யிடங்களை அழித்திடும் அரசாணை எண் 152 ஐ ரத்து செய்ய வேண்டும். காலமுறை, தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர், செவிலியர் ,கிராம உதவி யாளர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மார்ச் 28 செவ்வாய்க்கிழமையன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. வருவாய்த்துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவத்துறை, சத்து ணவு ஊழியர்கள் உட்பட 400 பேர் வரை வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் தேனி மாவட்ட தலைவர் பெ. பேயத்தேவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தாஜுதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் .ஓய்வூதியர் சங்க மாவட்ட தலை வர் கே.துரைராஜ் ,துணைத் தலை வர் கந்தசாமி மாவட்ட பொருளா ளர் முத்துக்குமார் ,மாவட்ட நிர்வாகி முத்துப்பாண்டி, பரமன் ,மோகன் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
மின்ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மின்வாரிய ஊழியர்கள் கூட்ட மைப்பு சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சென்னை யில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற பேரணியில் கலந்து கொள்ள தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 1186 பேரில் 706 பேர் கலந்து கொண் டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் ஆட்சியர் அலு வலகம், ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள், வட்டாட்சியர் அலுவலகங்க ளில் வேலைநிறுத்தம் நடைபெற் றது. இதனையொட்டி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத்தலைவர் முபா ரக் அலி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலை வர் ஞானத்தம்பி சிறப்புரையாற்றி னார். மாவட்டச்செயலாளர் விவே கானந்தன் விளக்கவுரையாற்றி னார். பல்வேறு சங்க நிர்வாகிகள் ஜான்பாஸ்டின் டல்லஸ், பிச்சை வேல், கல்பனா, ராசாத்தி ஆகியோர் ஆதரித்துப் பேசினர். நத்தம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் வேலைநிறுத்தம் மற் றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை
மதுரை மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் க.நீதிராஜா கோரிக்கை விளக்கி பேசினார். வரு வாய்த் துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எம். பி. முருகையன் துவக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செய லாளர் ஆ.செல்வம் நிறைவுரை யாற்றினார்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் வளாகத்தில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் மா.திருமுருகன் தலை மையில் நடைபெற்றது. பல்வேறு சங்க நிர்வாகிகள் விஜயராம லிங்கம், ஜெனிஸ்ட்டர் , முத்துச்சாமி, அருள் வசந்தி ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்ட பொருளாளர் அப்துல் நஜிமுதீன் நிறைவுரை யாற்றினார்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர், வத்திரா யிருப்பு, இராஜபாளையம் பகுதி களில் அரசு ஊழியர்கள் முழுமை யான அளவில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர் .இதர அலு வலகங்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிக்கு வர வில்லை.