தஞ்சாவூர், டிச.6 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, முடச்சிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சி.சக்கரவர்த்தி, தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், “எங்கள் முடச்சிக்காடு கிராமத்தில் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் அட்டவணை சாதியைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மை யாக வாழ்ந்து வருகின்றனர். விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் நிரம்பிய பின்தங்கிய பகுதியான இவ்வூரில் உயர்நிலைக் கல்வியை மாணவர்கள் பெற இயலாத நிலை உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பேராவூரணி அரசினர் மேல்நிலைப் பள்ளிக் குச் சென்று உயர்நிலைக் கல்வியை தொடர முடியாத நிலையே நீடிக்கிறது. தற்சமயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக இயங்கி வரும் எங்கள் பள்ளியை அரசு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அதற்குரிய போதிய மாணவர்கள் எண்ணிக்கையும் உள்ளது. இதற்காக கடந்த 2010 ஆம் ஆண்டே, ரூபாய் ஒரு லட்சம் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்ப டும் நிலையில், தேவையான கட்டிடங்கள், தள வாட சாமான்கள், ஆய்வுக்கூடங்கள், நூலக வசதி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அரசு கூறும் தேவையான நடைமுறை வசதி கள் அனைத்தும் செய்து தர உயர்நிலைப் பள்ளி அமைப்பு குழு தயாராக இருக்கிறது. எனவே, எங்கள் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.