சிவகங்கை, டிச.5- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட 15 ஆவது பேரவை சிவ கங்கையில் மாவட்ட தலைவர் கண்ண தாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் வினோத் ராஜா வரவேற்றுப் பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் காளிதாஸ் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாவட்ட செய லாளர் பாண்டி வேலை அறிக்கையும் மாவட்ட பொருளாளர் மாரி வரவு- செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வம் சிறப்பு ரையாற்றினார். தோழமைச்சங்க நிர்வாகி கள் உமாநாத், பாக்கியமேரி, விஜயகுமார், ராதாகிருஷ்ணன், வேலுச்சாமி, செல்ல முத்து, சின்னப்பன், குமரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 15வது மாவட்ட பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும். அரசு ஊழி யர்களுக்கு சரண் விடுப்பு, ஒப்படைப்பு போன்ற உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் காலி யாக உள்ள பணியிடங்களை ஆண், பெண் பாகுபாடு இன்றி இருபாலருக்கும் வாய்ப்பு தர வேண்டும். சிவகங்கை நகராட்சியை தரம் உயர்த்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படியை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக பொ.கண்ணதாசன், மாவட்ட செயலாள ராக இரா.இராதகிருஷணன்,மாவட்ட பொருளாளராக ஆர்.மாரி,மாவட்ட துணைத் தலைவர்களாக கா.முத்துக்குமார், காளி தாஸ், மூவேந்தன்,சின்னப்பன், மூகாம் பிகை, மாவட்ட இணைச்செயலாளர்களாக வினோத்ராஜா,விஜயகுமார் ,பயாஸ்அக மது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.