மதுரை, மே 28- மே 28 அகில இந்திய கோரிக்கை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். ஒன்றிய- மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப் பிட வேண்டும். புதிய கல்விக் கொள்கை யை கைவிட வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது விநி யோக முறையை சீர்படுத்த வேண்டும். வகுப்புவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் .அனைத்து ஒப்பந்த மற்றும் அவுட்சோர் சிங், தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மதுரையில் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆ.செல்வம், மாவட்டத் தலைவர் ஜெ.மூர்த்தி. மாவட்டத் துணைத் தலைவர் தூ.முருகன், மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா. டிஎன்ஆர்ஒஏ மாநிலப் பொதுச் செய லாளர் எம்.பி.முருகையன் ஆகியோர் பேசினர். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தேனி
தேனியில் நடைபெற்ற தர்ணா விற்கு தேனி மாவட்டத் தலைவர் பி. பேயத்தேவன் தலைமை வகித்தார். சிஐடியு தேனி மாவட்டத் தலைவர் சி. முருகன் தர்ணாவை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலா ளர் எஸ்.தாஜுதீன் துவக்க உரை யாற்றினர். தோழமைச் சங்க நிர்வாகி கள் ஆதரித்துப் பேசினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா. மங்களபாண்டியன் நிறைவுரையாற்றினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மாவட்டத் தலைவர் கண்ணதாசன் தலைமையில் தர்ணா நடைபெற்றது. மாநில பொதுச் செய லாளர் ஆ.செல்வம் துவக்கி வைத்துப் பேசினார். தோழமைச்சங்க நிர்வாகி கள் ஆதரித்துப் பேசினர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற் தர்ணாவிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.முபாரக் அலி தலை மை வகித்தார். மாவட்டச் செயலா ளர் விவேகானந்தன், மாநில துணை பொதுச் செயலாளர் இரா.மங்களப் பாண்டியன் மாவட்ட துணைத் தலை வர் சுகந்தி, பொருளாளர் குப்புசாமி ஆகியோர் பேசினர். தோழமை சங்கத் தலைவர்கள் ஆதரித்துப் பேசினர்.