மதுரை, அக்.11- மதுரை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையங்க ளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை மையத் திற்கு பரிந்துரைக்கப்பட்டு மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 கர்ப் பிணி தாய்மார்கள் உயிரி ழந்த விவகாரத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகராட்சி சுகாதா ரத்துறை இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரு கிறது. இதனையடுத்து அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை மையத்தில் அத்து மீறி நுழைந்து மருத்துவர் களை பணி செய்யவிடாமல் தடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க கோரியும், அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்து வர்கள் கடந்த 9 நாட்களாக அவசரமல்லாத சிகிச்சை களை புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில், 10-ஆவது நாளாக அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்து வர்கள் 200-க்கும் மேற்பட் டோர் இந்திய மருத்துவர்கள் சங்க மதுரை அலுவலகம் முன்பு புதனன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு மருத்து வர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.