districts

img

வணிகமயமாகிப் போன கல்வி; அவுட்சோர்சிங் முறைக்குச் செல்லும் அரசுத்துறைகள்

மதுரை, அக்.1- மக்கள் கல்வி கூட்டியக்கம் சார்பில் மது ரையில் கோரிக்கை மாநாடு ஞாயிறன்று நடை பெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் கண. குறிஞ்சி தலைமையில் நடைபெற்ற மாநாட்டை ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தா மன் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “இந்தியாவில் கல்வி  வணிகமயமாகிவிட்டது. பொதுத்துறை நிறு வனங்களிலிருந்து அரசு மெல்ல மெல்ல விலகி அவுட்சோர்சிங் மயமாக்கி வருகிறது.  மேலைநாடுகளில் கல்வி அரசின் கட்டுப்பாட்  டில் உள்ளது. இந்தியாவில் கல்வி பெயரள வில் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்  ளது. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்  பட்டபோது அம்பேத்கரைத் தவிர மற்றவர் கள் உயர்சாதியினராக இருந்ததால் கல்வி உயர்சாதியினருக்கு மட்டும்தான் என்ற உள் நோக்கத்தோடு வரையறுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி அடிப் படை உரிமை இல்லை. ஆனால் கல்வி நிலை யங்களை ஏற்படுத்துவது அடிப்படை உரிமை யாக உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கல்வி பெயரளவிற்கே உள்ளது.  தனியார்-மற்றும் கார்ப்பரேட் நிறுவ னங்களின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதால் அது வணிகமயமாகிவிட்டது. பணியாற்றும் ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல் உள்ளனர்.  அனைத்துத் துறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகுகின்றன. ‘அவுட்சோர்சிங்’ முறை யில் தனியார்மயமாகி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுத்துறைகளில் 90 சதவீதம் ஒப்  பந்தமுறைக்கு மாறிவருகிறது. ரயில்வே யில் 18 லட்சம் தொழிலாளர்கள் இருந்தால் ஏழு லட்சம் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழி லாளர்களாக உள்ளனர். 

தனியார்மயமே சிறந்தது என்ற கருத்தை  உளவியல் ரீதியாக நம்மீது திணிக்கிறார்கள். உரிமைகளைப் போராடித்தான் பெற வேண்  டும். அதற்கு சங்கங்கள், அமைப்பு ரீதியாக  ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தில் பெரும்  பாலும் ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்தே தனியார் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.  தனியார் கல்வி நிறுவனங்கள் தொழிற் சாலைகளுக்கு நிகராக மாறிவிட்டதால், அவற்றை அரசால் கட்டுப்படுத்த முடியா மல் போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் உள்ள தனியார் சட்டக்  கல்லூரிகள் அதிகக் கட்டணம் வசூலிப்ப தைக் குறிப்பிட்ட அவர், “அரசு சட்டக் கல்லூரி கள் சில ஆயிரங்களை மட்டுமே வசூலிக்கும்  போது, எந்தத் தயக்கமும் இல்லாமல் தனி யார் நிறுவனங்கள் இரண்டு லட்சத்துக்கு மேல் வசூலிக்கின்றன.  தனியார் கல்வி நிறுவனங்களால் தற்காலிக ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதி  ஹரிபரந்தாமன், “எப்படியாவது வேலை யைப் பெற்றே தீர வேண்டும் என்ற அவர்  களின் விரக்தியை தூண்டிலாகப் பயன்  படுத்தி, கல்வி நிறுவனங்கள் அவர்களை  மனதளவிலும் உடலளவிலும் சுரண்டுகின் றன.

இந்த மாநாட்டில், புதிதாக சுயநிதி கல்லூரி தொடங்க அரசு அங்கீகாரம் வழங்கக்  கூடாது. கல்வி நிறுவனங்களில் தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்த கூடாது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் தாய் தமிழ் பள்ளிகள் அனைத்தையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்.  அரசுக் கல்லூரிகளில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆயி ரக்கணக்கான உயர் உதவி பேராசிரியர் பணி யிடங்களையும் உடனடியாக வெளிப்படை  தன்மையுடன் லஞ்சத்திற்கு இடமில்லாமல்  நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றப் பொதுச்  செயலாளர் மா.சிவராமன் மக்கள் கல்வி கூட்டியக்க மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. முரளி, மூட்டா பொதுச் செயலாளர் எம். நாக ராஜன், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு வழக்கறிஞர் சே.வாஞ்சி நாதன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசி ரியர் சங்க மதுரை மாவட்டப் பொதுச்செய லாளர் என்.பெரியதம்பி, மூட்டா ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு உயர் கல்வி  பாதுகாப்பு இயக்க நிர்வாகி பெ.விஜய குமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய மாணவர் சங்க மாநிலத்  தலைவர் கோ. அரவிந்தசாமி உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.