தென்காசி, ஜூலை 10- தென்காசி மாவட்டம் செங் கோட்டை பணிமனையில் ஓட்டுநர் மாரி யப்பன் பணிச்சுமையின் காரணமாக வும் அதிகாரிகள் பணிக்கு கட்டாய படுத்தியதாலும் சனிக்கிழமை அன்று கிளையில் வைத்து மனமுடைந்து விஷம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் செங்கோட்டை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை கண்டித்து செங் கோட்டை பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிளை தலைவர் எம்.சிவ குமார் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து மத்திய சங்க உதவித் தலை வர் டி.வன்னியபெருமாள் பேசினார். பழனி குமாரசாமி, சுடலை மணி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் என். பால்ராஜ், சிஐ டியு மாவட்ட செயலாளர் எம் வேல்முரு கன் ஆகியோர் பேசினர்.