districts

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும்

மதுரை,ஜூன் 23-  அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கக்கோரி இன்று முதல் தொடர் போராட்டம் நடத்தப் படும் என்று மூட்டா அமைப்பு அறி வித்துள்ளது. 

இதுகுறித்து மூட்டா பொதுச் செயலாளர் மு.நாகராஜன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ்நாடு அரசு, பல்கலைக் கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் களுக்கான பல்கலைக்கழக ஊதி யக் குழு பரிந்துரையின் அடிப்படை யில் அவர்களின் ஊதிய மாற்றத்திற் காக உயர்கல்வித் துறை அரசாணை எண் 5-ஐ 11.01.2021 அன்று வெளி யிட்டது.

அதனைத் தொடர்ந்து அரசாணை எண் 5 இ ன்படி தமிழ கத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு கல்லூரி களில் பணியாற்றிடும் ஆசிரியர் களுக்கு நிலுவைத் தொகை யோடு உரிய ஊதியம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் அரசாணை எண் 5இன்படி இணைப் பேராசிரியர் பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில் இன்று வரை அதற் குரிய நிலுவைத் தொகை மட்டு மல்ல, அடிப்படை ஊதியம் கூட  வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஆறு மண்டலங்களில் உள்ள அரசு  உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் களுக்கான ஊதியம் வழங்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்  கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் மட்டும் உரிய ஊதியம் வழங்கப்பட்டு விட்டது.

உயர் கல்வித் துறையில் போதிய நிதியில்லை என்று கூறப் பட்ட நிலையில் சுடந்த 2023 - 2024 ஆம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட மானி யத்தில், செலவுகள் போக மீதம் 200 கோடி ரூபாய் நிதித்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர்கல்வித் துறையில் நிதி பற்றாக்குறை என்பதும் உண்மை யல்ல. மேலும் இந்த நிதியாண்டிலும் தேவையான நிதி அதாவது ஆசிரி யர்களுக்கு நிலுவைத் தொகை யோடு ஊதியம் வழங்க தேவை யான நிதி தமிழக அரசின் நிதித் துறையால் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

ஆனால் உயர் கல்வித்துறை இன்று வரை எந்தவிதமான ஆணை யும் பிறப்பிக்காமல் இணைப் பேரா சிரியர் பணி மேம்பாடு ஆணை பெறப்பட்ட ஆசிரியர்களுக்கு நியா யமாக வழங்கப்பட வேண்டிய ஊதியம் ஆறு மண்டலங்களில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பது ஏற்புடையதல்ல.

கடந்த மூன்று ஆண்டுகளாக உயர் கல்வித் துறையிலும், கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவ லகத்திலும் அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை முறையிட்டும் பல கட்ட போராட்டங்களை நடத்தி யும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

எனவே எங்களுக்கு உரிமை யான, நியாயமான, சட்டப்படி யான, ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மூட்டா சார்பில் சட்டப் பேரவையில் உயர்கல்வி மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் தினமான ஜூன் 24 திங்கட்கிழமை மாலை திருநெல்வேலி மற்றும் மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் பெருந் திரள் மனு முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்திடுவது என்றும் அதனைத் தொடர்ந்து உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை நடத்திடுவது என்றும் முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் இதில்  தலையிட்டு அரசு உதவி பெறும் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள் கின்றோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;