மதுரை, ஜூன். 9- மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தொட்டி அருகில் உள்ள கட்டண பொதுக் கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பு வழியாக கொண்டு செல்லப்படு கிறது. ஒரு வாரமாக இந்த பாதாள சாக்கடை இணைப்பிலிருந்து கழிவு களுடன் அதிகளவில் மலக்கழிவு நீர் வெளியேறுவதால் மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் வழி யாக நின்று செல்லும் பேருந்து பய ணிகள் இந்த துர்நாற்றத்தால் பெரும் அவதிப்படுகின்றனர். கழிவு நீர் தேங்கி இருப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவு நீர் தேங்கு வதை அகற்றி , மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திட வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.