districts

img

மதுரை புறநகரில் பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

மதுரை, ஜன.2- ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், தொழிலாளர் சட்டத் தொகுப்பை கைவிடக் கோரியும், காண்ட்ராக்ட் முறையை ஒழித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி யும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறு திப்படுத்த சட்டம் இயற்றிட குறையும், பெட்ரோலிய பொருட்களின் மீதான கலால்  வரியை குறைத்திட கோரியும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி  பிப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிஐடியு, ஏஐடி யுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின மதுரை புற நகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு திருப்பரங்குன்றத் தில் ஞாயிறன்று மாலை நடைபெற்றது. சிஐடியு  மாவட்டத் தலைவர் செ.கண்ணன், ஏஐடியுசி மாவட்ட துணை தலைவர் பி.முத்து வேல், எச்எம்எஸ்  மாவட்டப் பொருளா ளர் சி.சுந்தரம், ஏஐசிசிடியு மாவட்ட பொறுப் பாளர் கே.துரைப்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர்.  சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் பி. சிங்காரன்,  மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் பா. காளிதாஸ், மாவட்ட துணை பொதுச்செயலாளர் ஆர்.பால கிருஷ்ணன்,எச்எம்எஸ் மாநில துணைத் தலைவர் கே.ஏ. ராமச்சந்திரன், ஏஐசிசி டியு தமிழ்நாடு பொது செயலாளர் கே.ஞான தேசிகன் ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் தொழிலாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.