districts

img

அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பு

அம்பேத்கர் 133 வது பிறந்த தினத்தை முன்னிட்டு வேடசந்தூரில் உள்ள அவரது சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தீண்டாமைக்கெதிராக உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் எம்.ஆர்.முத்துச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் கே.டி.கலைச்செல்வன், பொருளாளர் ஆர்.வனஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.