districts

img

காந்திகிராம பல்கலை.,யில் உலகத் தாய்மொழி நாள் விழா

சின்னாளப்பட்டி, பிப்.28- காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் இந்தித்துறை, மலையாள மையம் சார்பில் உலகத் தாய் மொழி நாள் விழா பிப்ரவரி 22 அன்று நடைபெற்றது.  விழாவிற்குப் பல்கலை., துணைவேந்தர் (பொறுப்பு) டாக்டர் டி.டி.ரங்கநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாகக் கனரா வங்கி யின் தெற்கு மண்டல அலுவலக மொழிகள் அலுவலர் அஸ்வனி குமார் குப்தா, எழுத்தாளர், கவிஞர் அசோகன் மறயூர் ஆகியோர் பங்கேற்றனர்.  இதில், இந்தித் துறைத் தலை வர் பேராசிரியர் சலீம் பெய்க்  வரவேற்றார். இந்திப் பேராசிரியர் கந்தாரே சந்து லக்ஷ்மன் நன்றி கூறினார். மொழிப் புல முதன்மை யர் பேராசிரியர் பா.ஆனந்த குமார், மலையாள மையத்தின் இயக்குநர் பேராசிரியர் எஸ்.ஷாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்க ளுக்குப் பரிசுகளை துணை வேந்தர் வழங்கினார். இதில், தமிழ், மகளிரியல் துறை உள்ளிட்ட பல துறைப் பேராசிரி யர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.