districts

img

தோழர் வேலுச்சாமி உருவப்படத்திற்கு ஜி.ராமகிருஷ்ணன் நேரில் அஞ்சலி

நாமக்கல், மார்ச் 17- பள்ளிப்பாளையத்தில் கந்துவட்டி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப் பட்ட தோழர் வேலுச்சாமி திருவுருவப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தி னார். கந்துவட்டி மற்றும் பாலியல் வன்கொ டுமைக்கு எதிராகப் போராடி, படுகொலை செய்யப்பட்ட பள்ளிப்பாளையம் தோழர் வேலுச்சாமியின் வீட்டிற்குச் சென்று, அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத் தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், 2010 ஆம் ஆண்டு கந்து வட்டிக்கு கடன் வாங்கி தவணை கட்ட முடியாமல் அவகாசம் கேட்ட  பெண்மணியை, கந்துவட்டி நிறுவனம் நடத்தி வந்த சிவகுமார் உள்ளிட்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக, அந்த பெண்ணுடைய தாயார்,  கட்சியின் பள்ளிப்பாளையம் கிளைச் செயலாளர் வேலுசாமியை சந்தி த்து முறையிட்டார். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தில் தோழர் வேலுச்சாமி புகாரளித்தார்.  புகார் அளித்ததால் ஆத்திரம் கொண்ட அந்த கந்துவட்டி கும்பல், காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த வேலுச்சாமியை வெட்டி கொலை செய்த னர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து தமிழ்நாடு முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தின் விளைவாக, பெண் பாலியல் வல்லுறவு வழக்கு, வேலுச் சாமி கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, 12 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 14   ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உட்பட அபராதம் விதித்து உத்தரவிட்டது. இவ்வழக்கில் உறுதியாக போராடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் திரு மலைராஜனை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுகிறோம். மேலும், பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு மற்றும் நிதியுதவி வழங்கிய சிபிஎம் நாமக்கல் மாவட்டக்குழுவையும் பாராட்டுகிறோம். மேலும், தமிழக அரசு கந்துவட்டி சட்ட த்தை அமல்படுத்தியிருந்தால் இது போன்ற சம்பவம் நடைபெற்றிருக்காது. இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஒருபுறம் கந்துவட்டி, மற்றொரு புறம் நுண்நிதி நிறுவனங்கள் மூலம் அநியாய வட்டி வசூலிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்தி, முறைப்படுத்த வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தமிழக த்தில் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முன்னதாக, இந்நிகழ்வில்  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண் முகம், மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்க சாமி, எம்.அசோகன், ந.வேலு சாமி, சு.சுரேஷ், ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.