காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் மற்றும் சப் ஜூனியர்களுக்கான சிலம்பப் போட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடத்தப்படும் சிலம்பப் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 9-ஆம் வகுப்பு மாணவர் லோகேஷ் மாநில அளவில் முதல் பரிசு பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவரை சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், பகுதி குழு செயலாளர் கு.கணேசன், மல்லிகா, பி.வீரமணி, கருத்த கண்ணன், பாண்டி முத்துக்குமார், மார்நாடு, வாலிபர் சங்க பகுதிக்குழு செயலாளர் கா.கௌதம் பாரதி, பிரிதிவிராஜ், ஜீவா தமிழ், செல்வம் ஆகியோர் பாராட்டினர். நிகழ்வில் லோகேஷ் பெற்றோர் நதியா-பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.