சு.வெங்கடேசன் எம்.பி., மகிழ்ச்சி அறிவிப்பு
மதுரை,ஜன.21- மதுரை மக்களின் நீண்டகால 3 முக்கிய கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டுள்ளன என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் மகிழ்வோடு தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழர் திருநாளை உற்சாகத் தோடு உணர்வு மேலோங்கிடக் கொண்டாடி முடித்திருக்கிற இவ் வேளையில் மதுரை மக்களுக்கான மூன்று கோரிக்கைகள் இந்த புத்தாண்டில் நிறைவேறியுள்ளன என்ற மகிழ்வைப் பகிர்ந்து கொள்கிறேன்.
24 மணி நேரமும் இயங்கும் விமானநிலையம்
தென்மாவட்டங்களின் வணி கம், சுற்றுலா ஆகியவற்றின் வளர்ச் சிக்காக மதுரை விமான நிலையத் தினை 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனத் தொட ர்ந்து பல ஆண்டுகளாகப் போராடி வந்தோம். கடந்த மூன்றரை ஆண்டு களில் நாடாளுமன்றத்தில் அதனை வலியுறுத்தி பல நடவடிக்கை களில் ஈடுபட்டோம். ஒன்றிய அமைச்சர்களை நேரடியாகச் சந் தித்து இடைவிடாத முயற்சிகளைச் செய்து வந்தோம். தென் மாவட்டங்களைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இக்கோரிக்கைக்கு இணைந்து குரல் கொடுத்தனர். கடைசியாக நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரிலும் இப்பிரச்சனையை நான் எழுப்பி னேன். அதற்குத் தலைகீழான பதிலை அமைச்சர் தெரிவித்தார். ஆனாலும் விடாது போராடினோம். இப்பெரும் போராட்டத்தின் விளைவாக ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கத் தேவை யான தொழில் பாதுகாப்புப்படை வீரர்களை வழங்கவுள்ளதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது. இது நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி யாகும்.
மதுரை - போடி அகல பாதையில் விரைவு ரயில் இயக்கம்
மதுரை முதல் போடி வரை யிலான அகல ரயில் பாதை திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. பணிகளை விரைவாக முழுமைப்படுத்தி, ரயில்களை இயக்கக்கோரி தொடர்ந்து முயற்சி களைச் செய்தோம். ரயில்வே உயர் அதிகாரிகளை யும் ஒன்றிய ரயில்வே அமைச்சரை யும் பலமுறை நேரில் சந்தித்து வலி யுறுத்தினோம். அதன்படி கடந்த ஆண்டு மதுரை - தேனி வரை திட் டம் செயல்படத் தொடங்கியது. தேனிக்கும் போடிநாயக்கனூ ருக்கும் இடையே தண்டவாளப் பணிகள் முடிந்து, பாதுகாப்பு ஆணையர் ஆய்வு முடிந்து, 2-1-2023 ஆம் நாள் சான்றிதழ் வழங் கப்பட்டது. 85 கிலோமீட்டர் வேகத் தில் ரயில் ஓடலாம் என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை போடிநாயக்கனூர் பிரிவில் ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டுமென இரு வாரங்களுக்கு முன் மதுரை வந்த நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுவில் வலி யுறுத்தினேன். தற்போது போடி வரை ரயிலை நீட்டிப்பதற்கான பணிகள் நிறை வுற்று அதன் வேகத்தை அதிகரித்து போடி வரை இயக்குவதற்கான அறி விப்பு வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து போடியில் இருந்து சென்னைக்கு மதுரை வழி யாக விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. நமது தொடர்ச்சியான தலையீட் டின் காரணமாக போடி முதல் சென்னை வரை மதுரை வழியாக விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.
கேந்திர வித்யாலயா பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு
நாடாளுமன்றத்தின் கல்வி நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் மதுரைக்கு 3 ஆவது கேந்திரிய வித்யாலயா பள்ளி தேவை என்கிற கோரிக்கையை ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலி யுறுத்தியதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடையபட்டியில் மூன்றாவது பள்ளி அறிவிக்கப்பட்டு செயல் படத் தொடங்கியது. பள்ளியின் கட்டுமானப்பணி களுக்காக இருபது கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு அவற்றின் முதல் பகுதியாக ஐந்து கோடியே இருபது லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது என்ற மகிழ்வான செய்தி யைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வகையில் மதுரையின் நீண்டகால கோரிக்கைகளாக இருந்த 3 முக்கிய கோரிக்கைகள் நிறைவேறுகின்றன என்பதை மிகுந்த மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.