மதுரை, ஜன.27- தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்தி பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் பார்த்து பயன்பெற ஏதுவாக தெப்பக்குளம் பகுதியில் காட்சிப் படுத்தப்பட உள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சித் தலை வர் மரு.எஸ்.அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்க ளிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி ஜனவரி 31 வரை நான்கு தினங்கள் பொதுமக்கள் பார்வைக்கு மதுரை மாநகர் வண்டியூர் நெப்பக்குளம் பகுதியில் காட்சிப் படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.