மதுரை, செப்.5- சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பர னாரின் 142-ஆவது பிறந்ததினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாநில செயற்குழு உறுப்பினர்கள் சு. வெங்கடேசன் எம்.பி., எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், துணை மேயர் தி.நாகராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், அ.ரமேஷ், இரா. லெனின், ம. பாலசுப்பிரமணியம், ஆர். சசிகலா, வை.ஸ்டாலின், ஜெ.லெனின், டி. செல்வராஜ் மற்றும் பி.ராதா, மாமன்ற உறுப்பி னர் டி.குமரவேல், பி. கோபிநாத், பகுதிக் குழுச் செயலாளர்கள் பி. ஜீவா, ஏ.பாலு ஆகி யோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தி னர். திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூரில் உள்ள வ.உ.சி.சிலைக்கு மாநிலத் துணைப் பொதுச் செய லாளரும் விருதுநகர் மாவட்டச் செயலாள ருமான அ.இலட்சுமிகாந்தன், அமைப்பின் புரவலரும் அதிமுக நகர்ப் பொருளாளரு மான கருமாரி முருகன், நித்தியானந்தம், மல்லி கே.கருப்பையா, மரியடேவிட், ஜோதி ஸ்டுடியோ ராஜா (எ) ரவீந்திரன், கணேசன் உள்ளிட்டோர் மாலையணிவித்து மரி யாதை செலுத்தினர்.