districts

img

சிவகங்கை மாவட்டத்தில் 2363 விவசாயிகளுக்கு ரூ.19.66 கோடியில் இலவச மின் இணைப்பு

சிவகங்கை,செப்.30- சிவகங்கை மாவட்டத்தில் 2363 விவசா யிகளின் 3778 ஏக்கர் நிலங்கள் பயனடை யும் வகையில் ரூ.19.66 கோடி செலவில் இலவச மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. மின் இணைப்புகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு விவசாயி கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இலவச மின்சாரம் விவ சாயிகளுக்கு வழங்கி விவசாயிகளின் காவலனாக திகழ்ந்தார். அவர்களின் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து விவசா யிகளின் நலன் காத்து வருகிறார். அத னடிப்படையில் விவசாயிகள் வாங்கிய பொதுக்கடன்களை ரூ.12 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறார். கூட்டுறவு வங்கியில் மூலம் வழங்கப்பட்ட நகைக் கடன் ரூ 5000 கோடிக்கு மேற்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறார். மகளிர் சுய உதவிக்குழு பெற்ற கடன்கள் ரூ.2624 கோடி என மொத்தம் ரூ.21 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்து வேளாண்மை பெருங்குடி மக்களை பாதுகாத்து வருகிறார். 

தமிழகத்தில் இதுவரை 24 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் குறுகிய காலத்தில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கி வரலாற்று சாதனையை தமிழக முதல்வர் நிகழ்த்தி யுள்ளார். கடந்த காலங்களில் ரூ.2.5 லட்சம் கட்டினால் மட்டுமே மின் இணைப்பு கிடைத்து வந்த நிலைமையை மாற்றி எவ்வித பொருளாதார செலவும் இல்லா மல் விவசாயிகள் நலன் காத்திட இலவச மின்சாரத்தினை வழங்கியுள்ளார். ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2363 விவசாயிகளுக்கு ரூ.19.66 கோடி செலவில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3778 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது என்று   மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இத்திட்டத்தில் பயன்பெற்ற விவசாயி களை சந்தித்தபோது, சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் முத்துப்பட்டி வைரவன் என்ப வர் கூறுகையில், ஆழ்குழாய் கிணற்றுக் காக விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருந் தேன். விவசாய மின் இணைப்பு இல்லாமல் மழையை நம்பி விவசாயம் செய்து வந்தேன். மிகுந்த சிரமத்தில் குடும்பத்தை நடத்தி வந்தேன் .தற்சமயம் தமிழக முதல் வர் ஆணையின்படி சாதாரண வரிசை திட்டத்தின் கீழ் எனக்கு கடந்த 1 .9 .2022 முதல் புதிய மின் மின்சார மின் இணைப்பு  வழங்கப்பட்டது .இந்த மின் இணைப்பு கொண்டு 1.72 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்திட பயன் அடைந்து வருகின்றேன். இதனால் எனது வாழ்வாதாரம் சிறப்பு பெற்றுள்ளது. எனது வாழ்வில் மாற்றத் தை ஏற்படுத்திய தமிழக முதல்வர்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். 

மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கொன்னக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தெரிவிக்கையில், கொன்னக் குளம் கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றுக்கு  மின் இணைப்பு கேட்டு நீண்ட காலமாக காத்திருக்கிறேன். ஐந்து வருட காலமாக விவசாய மின் இணைப்பு கேட்டு விவசாய வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்ந்து வந்தேன். தமிழக முதல்வர் விவசாயிக ளின் நிலைமையை அறிந்து  விவசாய மோட்டார்களுக்கு மின் இணைப்பு கொ டுத்து விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் என்றார். இத்தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி ) மு.ராஜசெல்வன் ஆகி யோர் தெரிவித்துள்ளனர்.