ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு திருச்சிராப்பள்ளி, ஏப்.3- ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் ஞாயி றன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தாஸ், தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், ஏப்ரல் 6 அன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை கூட்டி ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தை நடத்துவது. ஏப்ரல் 11 அன்று வாழ்வாதாரக் கோரிக் கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தும் வகையில் கோட்டை முற்றுகை போராட்டத்தை நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.