districts

img

வன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கடமலைக்குண்டு, பிப்.5- தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் சனிக்கிழமையன்று விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.  கூட்டத்திற்கு விவசாய சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், கட மலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், கடமலை-மயிலை ஒன்றிய வனப்பகுதியில் அமைந்துள்ள அரசரடி, இந்திரா நகர் உள்ளிட்ட கிராம மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து விவசாயிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வழக்கில் வெற்றி பெறு வதற்காக எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  மேலும் மலைக்கிராமங்களில் பொது மக்கள் நீண்ட காலமாக வசித்து வந்ததற் கான ஆவணங்களை திரட்ட முடிவு செய் யப்பட்டது. கூட்டத்தில் தும்மக்குண்டு, வாலிப்பாறை, வருசநாடு, முறுக்கோடை உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் இருந்து வன விவசாயிகள் கலந்து கொண்டனர்.