districts

img

மூல வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கடமலைக்குண்டு, டிச.15- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் மூலவைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரச ரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் டிசம் பர் 14 செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை பெய்  தது.  இதனால் புதன்கிழமை அதி காலை மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இரண்டு புற கரைகளை யும் மூழ்கியவாறு செந்நிறத்தில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவ தால் நீர்வரத்து படிப்படியாக அதி கரித்து கொண்டே வருகிறது. இத னால் பொதுமக்கள் யாரும் ஆற் றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று கரை யோர கிராம மக்களுக்கு ஒன்றிய நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஆற்றில் அமைக்கப் பட்டுள்ள உறை கிணறுகளுக்கும் வெள்ள நீர் புகுந்து குடிநீர் மாச டைந்துள்ளது. எனவே குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என அந்  தந்த ஊராட்சி நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டு வருகிறது. இதற்கிடையே போதிய அளவு மழை இல்லாத தால் கடந்த சில நாட்களாக மூல வைகை ஆற்றில் நீர்வரத்து படிப்  படியாக குறைந்து வந்த நிலை யில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்  ளப்பெருக்கால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.