திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மடூர் ஊராட்சி புகையிலைப்பட்டியில் உள்ள எடுப்பான் குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு வலை, மூங்கில் கூடைகளை வைத்து மீன்களை பிடித்து, மகிழ்ச்சியுடன் எடுத்துச்சென்றனர்.